”அதிமுகவுடன் பாமக கூட்டணி வைக்கவில்லை என்றால், அப்போதே அதிமுக ஆட்சி கவிழ்ந்திருக்கும் ” – அன்புமணி!!

அதிமுகவுடன் பாமக கூட்டணி வைக்கவில்லை என்றால், அப்போதே அதிமுக ஆட்சி கவிழ்ந்திருக்கும் என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

சேலம் 5 ரோட்டில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட பா.ம.க.வின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான மருத்துவர் அன்புமணி ராமதாஸ், “திமுக தோல்வி அடைந்தால்தான் அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியம் கிடைக்கும் மநாடு அடுத்த தலைமுறையை காக்க வேண்டுமென்றால் திமுகவை தோற்கடியுங்கள்.

கடந்த 2019-ஆம் ஆண்டு, அதிமுகவுடன் பாமக கூட்டணி வைக்கவில்லை என்றால், அப்போதே அதிமுக ஆட்சி கவிழ்ந்திருக்கும்” என்றார்.

அ.ம.மு.க.வின் மாநில பொருளாளர் எஸ்.கே.செல்வம், பா.ஜ.க.வின் சேலம் மாநகர் மாவட்ட தலைவர் சுரேஷ் பாபு, பா.ஜ.க.வின் சேலம் தொகுதியின் பொறுப்பாளர் அண்ணாதுரை, பா.ம.க. எம்.எல்.ஏ. அருள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *