சென்னை:
‘தரமான கல்வி மற்றும் கட்டமைப்பு வசதிகள் இல்லாததால் அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறைந்துள்ளது’ என்று பாமக தலைவர் அன்புமணி குற்றம்சாட்டியுள்ளார்.
இதுதொடர்பாக நேற்று அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: நடப்பாண்டில் 5 லட்சம் மாணவர்களைச் சேர்க்க திமுக அரசு இலக்கு நிர்ணயம் செய்திருந்தது.
ஆனால், மாணவர் சேர்க்கை தொடங்கி 58 நாள்கள் நிறைவடைந்து விட்ட நிலையில், இதுவரை 1.12 லட்சம் மாணவர்கள் மட்டுமே புதிதாக சேர்ந்திருக்கின்றனர்.
அரசு பள்ளிகளில் தரமான கல்வி வழங்கப்படாததும், போதிய கட்டமைப்பு வசதிகள் இல்லாததால்தான் ஏழை மற்றும் நடுத்தர குடும்பத்து பெற்றோர் கடன் வாங்கியாவது தங்களின் குழந்தைகளை தனியார் பள்ளிகளில் சேர்க்கத் துடிக்கின்றனர்.
இது அரசின் தோல்வியே தவிர, பெற்றோரின் தவறு அல்ல. அரசு பள்ளிகளும், உதவி பெறும் பள்ளிகளும் திட்டமிட்டு சீரழிக்கப்பட் டுள்ளன.
அரசு பள்ளிகளின் உள்கட்டமைப்புகளை மேம்படுத்துதல், போதிய எண்ணிக்கையில் ஆசிரியர்களை நியமித்தல், இவற்றுக்காக பள்ளிக்கல்வித்துறை ஒதுக்கப்படும் நிதியை அதிகரித்தல் உள்ளிட்டவை அடங்கிய சிறப்பு திட்டத்தை அரசு உருவாக்கி செயல்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.