நார்வே செஸ் 2026 தொடரில் பட்டத்தை வென்ற முதல் இந்தியர் என்ற வரலாற்றுச் சாதனையைப் படைத்த பிரக்ஞானந்தாவுக்கு முதல்வர் விஜய் வாழ்த்து!!

சென்னை:
நார்வே செஸ் 2026 தொடரில் பட்டத்தை வென்ற முதல் இந்தியர் என்ற வரலாற்றுச் சாதனையைப் படைத்த கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந் தாவுக்கு முதல்வர் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

நார்வே செஸ் போட்டியில் பட்டம் வென்றார் இந்திய கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தா. இதன் மூலம் இந்த பட்டத்தை வென்ற முதல் இந்தியர் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார்.

இதனையடுத்து, முதல்வர் விஜய் தனது எக்ஸ் தளத்தில், “நார்வே தலைநகர் ஆஸ்லோவில் நடைபெற்ற நார்வே செஸ் 2026 (Norway Chess 2026) தொடரில் அறிவார்ந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி, பட்டத்தை வென்ற முதல் இந்தியர் என்ற வரலாற்றுச் சாதனையைப் படைத்திட்ட கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தாவுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள்.

ஒரே தொடரில் நடப்புச் சாம்பியன் மாக்னஸ் கார்ல்செனை இரண்டு முறையும், நான்கு போட்டிகளில் தொடர்ந்து வெற்றியும் பெற்று சாதனை படைத்துள்ளார்.

தமிழ்நாட்டிற்கும், இந்தியாவிற்கும் பெருமை சேர்த்துள்ள கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தா புதிய சாதனைகளைப் படைத்திட எனது வாழ்த்துகள்” இவ்வாறு அவர் கூறிய்யுள்ளார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *