சென்னை:
“சட்டப்பேரவையின் மரபு மாற்றப்பட்டு அவையில் இரு முறை தேசிய கீதம் பாடப்பட்டது.
அதை நாம் வரவேற்போம்; இதில் தவறு ஒன்றும் கிடையாது.” என தேதிமுக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கருத்து தெரிவித்துள்ளார்.
தமிழகத்தின் 17–வது சட்டப்பேரவைக் கூட்டம் ஆளுநர் ஆர்.வி.அர்லேகர் தலைமையில் இன்று காலை 10 மணிக்குத் தொடங்கியது.
இந்த கூட்டத்தொடர் தமிழ்த் தாய் வாழ்த்துடன் தொடங்கியது, இரண்டாவதாக தேசிய கீதம் பாடப்பட்டது. அதனைத் தொடர்ந்து ஆளுநர் அர்லேகர் உரையை வாசித்தார்.
சட்டப்பேரவையின் மரபு மாற்றப்பட்டு அவையில் இரு முறை தேசிய கீதம் பாடப்பட்டது.
அவையின் தொடக்கத்தில் தமிழ்த் தாய் வாழ்த்து, முடிவில் தேசிய கீதம் பாடுவதே மரபு.
இதை மாற்றி, இன்று தொடக்கத்தில் தமிழ்த் தாய் வாழ்த்துடன் தேசிய கீதமும் பாடப்பட்டது.
பின்னர், ஆளுநர் உரைக்கு பின்னரும் 2-வது முறையாக தேசிய கீதம் பாடப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இது குறித்து பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களிடம் பேசும்போது, “தேசிய கீதம் இரண்டு முறை பாடப்பட்டுள்ளது. அதை நாம் வரவேற்போம்;
இதில் தவறு ஒன்றும் கிடையாது. அதற்கு முன்னர் தமிழ்த் தாய் வாழ்த்து பாடியிருக்கிறார்கள்; அதையும் நாம் வரவேற்போம்.
ஆளுநர் உரை ஆளும் கட்சி தரப்புக்கு ஆதரவான உரையாக இருந்தது” என்று அவர் தெரிவித்தார்.