பொதுவாக கிராம்பு நமக்கு ஆரோக்கியம் தரக்கூடியது .இதன் நன்மைகள் குறித்து நாம் இப்பதிவில் பார்க்கலாம்.
1.கிராம்புடன் தேன் சேர்த்து சாப்பிட,கிராம்பில் உள்ள வைட்டமின் சி வெள்ளை அணுக்களை அதிகப்படுத்தி நம்மை நோய் தொற்றிலிருந்து பாதுகாக்கிறது .
2.தினமும் இரவு தூங்குவதற்கு முன்பு இரண்டு கிராம்புகளை மென்று சாப்பிட்டு, ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான நீரைக் குடிப்போரை பின் வரும் இந்த நோய்கள் அண்டாது.
3.சிலர் பல்வலி, பற் சொத்தை, ஈறு பிரச்சனைகள், போன்ற பிரச்சினையால் அவதிப்பிடுவர் .
4.இது போன்ற வாய் சம்பந்தமான பிரச்சனைகள் போன்றவற்றிற்கு கிராம்பு ஒரு சிறந்த மருந்தாக விளங்கும் .
5.ஒன்றிரண்டு கிராம்பை மென்று வாயில் வைத்திருந்து பொறுமையாக சாப்பிட்டால் ஈறு, பல்வலி போன்றவை நீங்கும்.
6.சிலருக்கு செரிமான சக்தி குறைவாக இருக்கும் ,இன்னும் சிலருக்கு இம்மியூனிட்டி பவர் குறைவாக இருக்கும் .
7.இவர்கள் தினம் இரண்டு கிராம்பை வாயில் வைத்து விழுங்கினால் இந்த பிரச்சினையிலிருந்து நிவாரணம் கிடைக்கும்.