கொடைக்கானலில் தொடர் மழை: கோடை விழாவில் முக்கிய விழாவாக இன்று நடைபெற இருந்த படகுப் போட்டி ரத்து!!

கொடைக்கானல் மலைப் பகுதிகளில் நேற்று இரவு முதல் பெய்து வரும் கனமழையால், கோம்பைக்காடு அருகே மூங்கில் காடு என்ற கிராமத்தில் உள்ள ஆற்றில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

கிராம மக்கள் ஆற்றைக் கடந்து வந்துதான் அத்தியாவசியப் பொருட்களை வாங்க முடியும் என்பதால், 50க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் தவித்து வருகின்றனர்.

இந்நிலையில் கொடைக்கானலில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக கொடைக்கானல் கோடை விழாவில் முக்கிய விழாவாக இன்று நடைபெற இருந்த படகுப் போட்டி ரத்து செய்யப்படுவதாக சுற்றுலாத்துறை அறிவித்துள்ளது.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *