மோடி பிரதமராகவும், ராதிகா வெற்றி பெறவும் வேண்டி சரத்குமார் அங்கப்பிரதட்சணம் !!

மோடி பிரதமராகவும், ராதிகா வெற்றிபெறவும் வேண்டி சரத்குமார் அங்கப்பிரதட்சணம் மேற்கொண்டார்.

விருதுநகர் மக்களவைத் தொகுதியில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி சார்பில் வேட்பாளர் மாணிக்கம் தாகூர், பாஜக சார்பில் நடிகை ராதிகா, அதிமுக கூட்டணியில் தேமுதிக சார்பில் விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன் ஆகியோர் போட்டியிட்டு ள்ளனர். நாளை மக்களவை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது.

இந்நிலையில் நரேந்திர மோடி, ராதிகா ஆகியோர் தேர்தலில் வெற்றிபெற வேண்டி விருதுநகர் மாரியம்மன் கோயிலில் நடிகரும் பாஜக பிரமுகருமான சரத்குமார் அங்கப்பிரதட்சணம் செய்தார்.

கோயிலுக்குள் சரத்குமார், ராதிகா ஆகியோர் வேண்டுதலை நிறைவேற்றியதை காண பக்தர்கள் திரண்டனர்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *