டி20 உலகக்கோப்பை தொடரில் நேற்று நடந்த லீக் போட்டியில் தென் ஆப்பிரிக்கா- வங்காளதேசம் அணிகள் மோதின. இந்த போட்டி நியூயார்க்கில் உள்ள நசாவ் கவுண்டி சர்வதேச கிரிக்கெட் மைத்தில் நடைபெற்றது.
இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்க அணியானது 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 113 ரன்களைச் சேர்த்தது. வங்கதேச அணி தரப்பில் தன்ஸிம் ஹசன் ஷாகிப் 3 விக்கெட்டுகளையும், தஸ்கின் அஹ்மத் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றி அசத்தினர்.
இதனையடுத்து களமிறங்கிய வங்காளதேச அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 109 ரன்களை மட்டுமே எடுத்தது. இதன்மூலம் தென் ஆப்பிரிக்க அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியைப் பதிவுசெய்தது.
இந்நிலையில் இப்போட்டியில் வெற்றிபெற்றதன் மூலம் தென் ஆப்பிரிக்க அணி பல சாதனைகளை பதிவுசெய்துள்ளது. அந்தவகையில் டி20 உலகக்கோப்பை தொடர் வரலாற்றில் மிக குறைந்த இலக்கை கட்டுப்படுத்திய அணி எனும் சாதனையை பதிவுசெய்துள்ளது.
முன்னதாக இந்திய அணி பாகிஸ்தானுக்கு எதிராகவும், இலங்கை அணி நியூசிலாந்துக்கு எதிராகவும் 120 ரன்களைக் கட்டுப்படுத்தியதே சாதனையாக இருந்தது அதனை தற்போது தென் ஆப்பிரிக்கா முறியடித்துள்ளது.
மேலும் டி20 உலகக்கோப்பை தொடர் வரலாற்றில் தென் ஆப்பிரிக்க அணி 5-வது முறையாக 5 ரன்களுக்கு கீழ் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது. வேறெந்த அணியும் இரண்டு முறைக்கு மேல் டி20 உலகக்கோப்பை தொடரில் 5 ரன்களுக்கு கீழ் வெற்றியைப் பதிவுசெய்ததில்லை.
மேற்கொண்டு தென் ஆப்பிரிக்க அணி வங்கதேசத்திற்கு எதிராக 9-வது முறையாக தொடர்ச்சியான வெற்றிகளைப் பதிவுசெதுள்ளது