”தமிழ்நாடு அரசு பள்ளி மாணவர்களுக்கு வழங்கிய இலவச சைக்கிள்களில் தரம் இல்லை” – ப.சிதம்பரம் குற்றச்சாட்டு!!

தமிழ்நாடு அரசு பள்ளி மாணவர்களுக்கு வழங்கிய இலவச சைக்கிள்களில் தரம் இல்லை என்று மத்திய முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரம் குற்றச்சாட்டியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது சமூகவலைத்தள பக்கத்தில், தமிழ்நாட்டில் மாணவர்களுக்கு அரசு வழங்கிய இலவச சைக்கிள்களின் தரக்குறைவு குறித்து மாணவர்களும் ஆசிரியர்களும் கருத்துத் தெரிவித்திருக்கிறார்கள்

இந்த தரமில்லாத சைக்கிள்களை வேறு வழியில்லாமல் விற்க வேண்டிய கட்டாயம் மாணவர்களுக்கு ஏற்பட்டிருக்கிறது என்று அறிந்து அதிர்ச்சியடைந்தேன்

சைக்கிள்களை தயாரித்து அளித்த நிறுவனங்கள் எவை? 3-4 நிறுவனங்களுக்கு மேல் இருக்க முடியாதே?

இந்தத் தரமில்லாத சைக்கிள்களத் திரும்பப் பெற்று அவற்றுக்கு மாற்றாக தரமான சைக்கிள்களை அந்த நிறுவனங்கள் தர வேண்டும் என்று சட்டப்படியான நடவடிக்கைகளத் தமிழ்நாடு அரசு எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *