”புதிய வந்தே பாரத் ரெயில் சேவையால் தொழில்கள் வளரும், வேலைவாய்ப்புகள் பெருகும்” – பிரதமர் மோடி!!

வந்தே பாரத் ரெயில்கள் தொடக்க விழாவில் பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:

வளர்ச்சி அடைந்த பாரதம் என்ற இலக்கை நோக்கிய பயணத்திற்கு புதிய வந்தே பாரத் ரெயில் சேவைகள் உதவும்.

புதிய வந்தே பாரத் ரெயில் சேவையால் தொழில்கள் வளரும். வேலைவாய்ப்புகள் பெருகும்.

கோவில் நகரம் மதுரை, ஐடி நகரம் பெங்களூரு இடையே வந்தே பாரத் ரெயில் சேவை பெருமிதம் என கூறினார்.

இதைத்தொடர்ந்து சென்னை-நாகர்கோவில், மதுரை-பெங்களூரு இடையிலான வந்தே பாரத் ரெயில் சேவையை காணொலி மூலம் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *