புதுடெல்லி:
பிரதமர் நரேந்திர மோடி தனது எக்ஸ்தள பதிவில் கூறியிருப்பதாவது:- இன்று என்ஜினீயர்கள் தினம். இதையொட்டி இந்தியாவின் பொறியியல் நிலப்பரப்பில் ஒரு அழியாத முத்திரையைப் பதித்த சர்.எம்.விஸ்வேஸ்வரய்யாவுக்கு நான் மரியாதை செலுத்துகிறேன்.
தங்கள் படைப்பாற்றல் மற்றும் உறுதிப்பாட்டின் மூலம், புதுமைகளை முன்னெடுத்து, துறைகளில் கடுமையான சவால்களைச் சமாளிக்கும் அனைத்து என்ஜினீயர்களுக்கும் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
வளர்ச்சி அடைந்த இந்தியாவை உருவாக்குவதற்கான கூட்டு முயற்சிகளில் எங்கள் என்ஜினீயர்கள் தொடர்ந்து முக்கிய பங்கு வகிப்பார்கள்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.