சுரங்​கப்பாதைகள், மேம்​பாலங்​களின் கீழ் தண்​ணீர் தேங்​கி​யிருந்​தால் பேருந்​துகளை மாற்று வழி​யில் இயக்க வேண்​டும் – ஓட்டுநர்களுக்கு அறிவுறுத்தல்!!

சென்னை:
வடகிழக்கு பரு​வ​மழை முன்​னெச்​சரிக்​கை​யாக மழைநீர் தேங்​கிய சுரங்​கப் பாதைகள், மேம்​பாலங்​களின்​கீழ் பேருந்​துகளை இயக்​கக் கூடாது என ஓட்​டுநர்​களுக்கு போக்​கு​வரத்து துறை அறி​வுறுத்​தி​யுள்​ளது.

தமிழகத்​தில் வடகிழக்கு பரு​வ​மழை தொடங்​கியது முதல் மாநிலம் முழு​வதும் பரவலாக மழை பெய்து வரு​கிறது.

மேலும் மோந்தா புயல் தீவிரம் அடைந்​த​தால் சென்னை உட்பட வட தமிழக மாவட்​டங்​களில் கடந்த 2 நாட்​கள் தொடர்ந்து மழை பெய்​தது. அடுத்த 2 மாதங்​கள் பரு​வ​மழை தீவிரமடைய வாய்ப்​புள்​ளது.

இந்​நிலை​யில் பேருந்து ஓட்​டுநர்​கள், நடத்​துநர்​கள் வழி​காட்டு நெறி​முறை​களை கடைபிடித்து பயணி​கள் பாது​காப்பை உறுதி செய்ய வேண்​டும் என போக்​கு​வரத்து துறை அறி​வுறுத்​தி​யுள்​ளது.

இது குறித்து போக்​கு​வரத்து துறை வெளி​யிட்ட சுற்​றறிக்​கை​யில் கூறி​யிருப்​ப​தாவது: சுரங்​கப்பாதைகள், மேம்​பாலங்​களின் கீழ் தண்​ணீர் தேங்​கி​யிருந்​தால் பேருந்​துகளை மாற்று வழி​யில் இயக்க வேண்​டும்.

காட்​டாற்று ஓர சாலைகளில் பேருந்தை இயக்​கும்​போது கவன​மாக வெள்​ளத்​தின் தன்​மையை அறிந்து இயக்க வேண்​டும்.

தண்​ணீர் குறை​வாக இருப்​ப​தாகக் கூறி பயணி​கள் பேருந்தை இயக்க சொன்​னாலும் மாற்று வழிகளை பயன்​படுத்த வேண்​டும். பணிமனை​களில் மழைநீர் தேங்​காத வகை​யில் வடி​கால்​கள் சரிவர இருக்​கின்​றனவா என சரி​பார்க்க வேண்​டும்.

பேருந்​துகளில் பழுதுதொடர்​பாக புகார்​கள் வந்​தால் உடனடி​யாக கிளை மேலா​ளர்​களுக்கு தெரியப்​படுத்த வேண்​டும். சாலை​யில் மின்​கம்​பி, மரங்​கள் விழுந்​துள்​ளதா என கண்​காணித்​த​படி கவன​மாக இயக்க வேண்​டும்.

பணிமனை​களில் உள்ள டீசல் பங்க் சேமிப்பு கிடங்​கில் தண்​ணீர் கலக்​க​வில்லை என்​பதை உறுதி செய்​ய​வேண்​டும்.

இணைய வழி​யில் டிக்​கெட் முன்​ப​திவு செய்த பயணி​களுக்கு பேருந்து புறப்​பாடு குறித்து முன்​கூட்​டியே குறுஞ்​செய்தி அனுப்ப வேண்​டும்.
இவ்​வாறு கூறப்​பட்​டுள்​ளது.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *