கார்த்திகை தீப திரு​விழாவை முன்​னிட்டு திருவண்ணாமலை நகரத்துக்கு டிச. 2, 3 ஆகிய தேதி​களில் சிறப்பு பேருந்​துகள் இயக்​கப்​படும் !!

சென்னை:
கார்த்திகை தீப திரு​விழாவை முன்​னிட்டு திருவண்ணாமலை நகரத்துக்கு டிச. 2, 3 ஆகிய தேதி​களில் சிறப்பு பேருந்​துகள் இயக்​கப்​படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அரசு விரைவுப் போக்​கு​வரத்​துக் கழக மேலாண் இயக்​குநர் மோகன் வெளி​யிட்ட அறிக்​கை:

தமிழகத்​தின் மிக​வும் பிரசித்தி பெற்ற கார்த்​திகை தீபத் திரு​நாளை முன்​னிட்டு தொலை​தூரப் பயணி​கள் திரு​வண்​ணா​மலைக்கு சென்று வர ஏது​வாக நாகர்​கோ​வில், திருநெல்​வேலி, தூத்​துக்​குடி, செங்​கோட்​டை, மதுரை மற்​றும் கோவை ஆகிய ஊர்​களி​லிருந்து அரசு விரைவுப் போக்​கு​வரத்​துக் கழகம் மூலம் அதிநவீன சொகுசு பேருந்​து, இருக்கை மற்​றும் படுக்கை வசதி கொண்ட குளிர்​சாதனப் பேருந்​துகள் டிச. 2, 3 ஆகிய நாட்​களில் இயக்​கப்பட உள்ளன.

மேலும், திரு​வண்​ணா​மலை​யில் நடை​பெறும் பவுர்​ணமியை முன்​னிட்டு சென்​னையி​லிருந்து திரு​வண்​ணா​மலைக்கு 160 அதிநவீன குளிர்​சாதனம் மற்​றும் குளிர்​சாதனமில்லா இருக்கை மற்​றும் படுக்கை வசதி​யுடன் கூடிய பேருந்​துகள் அரசு விரைவுப் போக்​கு​வரத்​துக் கழகம் மூலம் டிச. 3,4 ஆகிய நாட்​களில் இயக்​கப்பட உள்​ளன.

இணையதளம், செயலி: இச்​சிறப்பு பேருந்​துகளுக்கு www.tnstc.in இணையதளம் மற்​றும் டிஎன்​எஸ்​டிசி செயலி ஆகியவற்றின் மூல​மாக இரு​புற​மும் முன்​ப​திவு செய்து பயணிக்க வழி​வகை செய்​யப்​பட்​டுள்​ளது.

மேலும் பேருந்து இயக்​கம் குறித்த தகவலுக்கு மதுரை 9445014426, திருநெல்​வேலி 9445014428, நாகர்​கோ​வில் 9445014432, தூத்​துக்​குடி 9445014430, கோவை 9445014435, சென்னை தலை​மையகம் 9445014463 மற்​றும் 9445014424 ஆகிய எண்​களில் தொடர்பு கொள்ளலாம்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *