வரி விதிப்பு என்​பது ஒரு தடை​யாக இல்​லாமல் நம்​பிக்கை மற்​றும் நியா​யத்​தின் பால​மாக செயல்​படு​வதை அதி​காரி​கள் உறுதி செய்ய வேண்​டும் – குடியரசுத் தலை​வர் திர​வுபதி முர்மு பேச்சு !!

புதுடெல்லி:
இந்​திய வரு​வாய் பணி பயிற்சி அதி​காரி​கள் கூட்ட நிகழ்ச்​சி​யில் குடியரசுத் தலை​வர் திர​வுபதி முர்மு பேசி​ய​தாவது:

நாட்டை கட்​டமைப்​ப​தற்கு வரி வரு​வாய் மிக​வும் முக்​கிய​மானது. இதைக்​கொண்​டு​தான், கல்​வி, சுகா​தா​ரம், சமூக நல திட்​டங்​கள் செயல்​படுத்​தப்​பட்டு வரு​கின்​றன.

எனவே வலு​வான இந்​தி​யாவை உரு​வாக்​கு​வ​தில் உங்​களின் பங்கு முக்​கிய​மானது. ஆனால், வரி வசூலின்போது மென்​மை​யான அணுகு​முறையை கடைபிடிக்க வேண்​டும். வரி செலுத்​து​வோருக்கு ஏற்​படும் அசவு​கரி​யங்​களை நீங்​கள் குறைக்க வேண்​டும்.

சாணக்​கியர் அர்த்​த​சாஸ்​திரத்​தில் கூறியபடி, மலரிலிருந்து தேனை எடுக்​கும் தேனீக்​களைப் போல வரு​வாய் துறை அதி​காரி​கள் வரி வசூலில் ஈடுபட வேண்​டும்.

இந்​திய வரி​வி​திப்பு முறை​யில் மைல்​கல் நடவடிக்​கை​யாக நடப்​பாண்டு செப்​டம்​பரில் ஜிஎஸ்​டி-​யில் சீர்​திருத்​தங்​கள் அறி​முகப்​படுத்​தப்​பட்​டன.

இது, தொழில்​முனை​வு, வேலை​வாய்ப்பு மற்​றும் மக்​களின் வாழ்க்​கையை எளிமை​யாக்கி உள்​ளது. அனை​வரை​யும் உள்​ளடக்​கிய வளர்ச்சி என்ற இந்​தி​யா​வின்​ தொலைநோக்கு திட்​டத்தை பலப்​படுத்தி உள்​ளது.

வரி விதிப்பு என்​பது ஒரு தடை​யாக இல்​லாமல் நம்​பிக்கை மற்​றும் நியா​யத்​தின் பால​மாக செயல்​படு​வதை அதி​காரி​கள் உறுதி செய்ய வேண்​டும்.

வரி விதிப்பு முறை​யில் வெளிப்​படை​யான, பொறுப்​புணர்​வுமிக்க, நவீன தொழில்​நுட்ப பயன்​பாட்டை அதி​காரி​கள் கொண்டு சேர்க்க வேண்​டும்.

இளம் அதி​காரி​களான நீங்​கள் புது​மை​யானவர்​களாக​வும், பகுப்​பாய்வு செய்​யும் திறன் கொண்​ட​வர்​களாக​வும் இருக்க வேண்​டும்.

உலகளா​விய வர்த்​தகம், தொழில்​நுட்​பம் மற்​றும் பொருளா​தா​ரத்​தில் ஏற்​படும் விரை​வான மாற்​றங்​களுக்கு ஏற்ப உங்​களை தகவ​மைத்​துக் கொள்ள வேண்​டியது அவசி​யம். இவ்​வாறு முர்​மு பேசி​னார்​.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *