வாக்​குச் சாவடி நிலை அலு​வலர்​கள் அதி​கப்​படி​யான மன அழுத்​தத்​தில் உள்​ளனர்; ஆட்சியரின் கருத்தால் ஆலோசனைக் கூட்டத்தில் சலசலப்பு!!

செங்கல்பட்டு:
அங்​கீகரிக்​கப்​பட்ட அரசி​யல் கட்சி பிர​திநிதி​களு​டன் வாக்​காளர் பட்​டியல் தீவிர திருத்​தம் தொடர்பாக ஆலோ​சனை கூட்​டம் ஆட்​சி​யர் சினேகா தலை​மை​யில் நேற்​று, செங்கை ஆட்​சி​யர் அலு​வல​கத்​தில் நடை​பெற்​றது.

திமுக, அதி​முக உள்​ளிட்ட அங்​கீகரிக்​கப்​பட்ட கட்​சிகளின் பிர​தி​நி​தி​கள் பங்​கேற்று தங்​களது கருத்​துகளை தெரி​வித்​தனர். அப்​போது, ‘வாக்குச்சாவடி நிலை அலு​வலர்​கள் பல இடங்​களில் ஒத்​துழைப்பு தரவில்​லை.

வாக்​காளர் திருத்த காலக்​கெடு முடிவடைவதற்கு இன்​னும் சில தினங்​களே உள்ள நிலை​யில் படிவங்​கள் பல இடங்​களில் சரிவர விநி​யோகிக்​கப்​ப​டா​மல் உள்​ளது.

வாடகை வீட்​டில் குடியிருப்பவர்​கள் பக்​கத்து தெரு​வுக்கு குடி பெயர்ந்து சென்​றாலும், அதை வாக்​குச்​சாவடி நிலை அலு​வலர்​கள் கண்​டு​பிடித்து படிவங்​கள் வழங்​காமல் இடமாற்​றம் என தெரி​வித்து படிவங்​களை திருப்பி அனுப்பு​கின்றனர்.

வாக்​காளர் பட்​டியல் படிவங்​களை இணை​யத்​தில் பதிவேற்​றும் பணியை கடைநிலை ஊழியர்​களான கிராம உதவி​யாளர்​கள், அங்​கன்​வாடி பணி​யாளர்​கள் போன்​றவர்​கள் மேற்​கொள்​கின்​றனர்.

அவர்​களுக்கு இணை​யம் தொடர்​பான தகவல் தொழில்​நுட்​பத்​தில் பதிவேற்​று​வ​தில் சிக்​கல்​கள் அதி​கரித்​துள்​ளன’ என்று குற்​றம் சாட்​டினர்.

மேலும், ‘தாம்பரத்தில் ஒரே முகவரி​யில் பல வாக்​காளர்கள் இடம் பெற்​றுள்​ள​தால் அதை கண்​டறிந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்​டும். ஒருவருக்கு ஒரு மாநிலத்​தில் மட்​டுமே வாக்​குரிமை உள்​ளதை உறு​திப்​படுத்த வேண்​டும்’ எனவும் வலி​யுறுத்​தினர்.

அப்​போது பேசிய ஆட்​சி​யர் சினே​கா, “வாக்​குச் சாவடி நிலை அலு​வலர்​கள் அதி​கப்​படி​யான மன அழுத்​தத்​தில் உள்​ளனர்.

10 முதல் 18 மணி நேரம் வரை அவர்​கள் பணி செய்ய வேண்​டிய கட்​டா​யத்​தில் இருப்​ப​தால் சில இடங்​களில் இவ்​வாறு நடை​பெறுகிறது.

இந்​தப் பிரச்​சினை விரை​வில் சரிசெய்​யப்​படும்’ என தெரி​வித்​தார். ஆட்​சி​யரின் கருத்​தால், ஆலோ​சனைக் கூட்​டத்​தில்​ சலசலப்​பு ஏற்​பட்​டது.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *