திமுக கூட்​ட​ணி​யில் தடு​மாற்​றம் ஏற்​பட்​டுள்​ள​தாக கருத்து தெரி​வித்​த அதிமுக பொதுச்​செய​லா​ளர் பழனி​சாமி !!

சென்னை:
திமுக கூட்​ட​ணி​யில் தடு​மாற்​றம் ஏற்​பட்​டுள்​ள​தாக அதிமுக பொதுச்​செய​லா​ளர் பழனி​சாமி தெரி​வித்​துள்​ளார். அதிமுக சார்​பில் முன்​னாள் முதல்​வர் எம்​ஜிஆரின் 109 பிறந்​த​நாள் விழா பொதுக்​கூட்​டம், சென்னை கேகே நகரில் நேற்று நடை​பெற்​றது.

இதில் கட்​சி​யின் பொதுச்​செய​லா​ளர் பழனி​சாமி பங்​கேற்று நலத்​திட்ட உதவி​களை வழங்கி பேசி​ய​தாவது:

நாட்டில் எத்​தனையோ தலை​வர்​கள் இருந்​தா​லும் மக்​களுக்​காக வாழ்ந்த ஒரே தலை​வர் எம்​ஜிஆர். எம்​ஜிஆரும், ஜெயலலி​தா​வும் வரலாறு படைத்த தலை​வர்​கள். இந்த பூமி உள்​ளவரை அவரது புகழ் நிலைத்து நிற்​கும்.

திமுக ஆட்​சிக்கு வந்து 5 ஆண்டுகள் நிறைவு பெற இருக்​கிறது. அடுத்த மாதம் தேர்​தல் அறி​வித்து விடு​வார்​கள்.

ஏப்​ரல் முதல் வாரத்​தில் தேர்​தல் நடக்​கும். திமுக ஆட்​சிக்கு இன்​னும் 2 மாதங்​கள், 2 அமா​வாசைகள் தான் இருக்​கிறது. இந்​நிலை​யில் புதிய புதிய திட்​டங்​களை அறிவிக்​கிறார்​கள், அடிக்​கல் நாட்​டு​கிறார்​கள். ஒரு மாதத்​தில் திட்​டங்​களை நிறைவேற்ற முடி​யு​மா?

அதிமுக பலமான கூட்டணி: காங்​கிரஸ் – திமுக கூட்​ட​ணி​யில் குழப்​ப​மும், விரிசலும் வந்​தாகி​விட்​டது. உதயநி​தி, காங்​கிரஸ் கை கொடுக்​கும் என்​றார். ஆனால் கை நழு​வும் நிலை​யில் உள்​ளது.

திமுக கூட்​ட​ணி​யில்​தடு​மாற்​றம் ஏற்​பட்​டுள்​ளது. அதி​முக பலம் வாய்ந்த கூட்​ட​ணியை அமைத்​துள்​ளது. அதி​முக கூட்​ட​ணி​யில் பல கட்​சிகள் வந்​துள்​ளன. இன்​னும் சில கட்​சிகள் வர உள்​ளன.

திமுக ஆட்​சியை எப்​போது வீட்​டுக்கு அனுப்​புவது என மக்​கள் தேர்​தலை எதிர்​நோக்கி காத்​திருக்​கின்​றனர். இந்த தேர்​தலில் நமது கூட்​டணி 210 இடங்​களில் வெல்​லும். அதி​முக தனி பெரும்​பான்​மை​யுடன் ஆட்சி அமைக்​கும்.

4 அதிகார மையங்கள்: திமுக அரசில் ஸ்டா​லின், உதயநி​தி, சபரீசன், துர்கா ஸ்டா​லின் என 4 முதல்​வர்​கள் தமிழகத்தை ஆட்​டிப் படைக்​கின்​றனர். தமிழகத்தை 4 அதி​கார மையங்​கள் ஆண்டு கொண்​டிருக்​கின்​றன.

திமுக​வினர் கடந்த 5 ஆண்​டு​களில் ரூ.4 லட்​சம் கோடி வரை கொள்ளை அடித்​துள்​ளனர். தேர்​தலின்​போது பல திமுக அமைச்​சர்​கள் பத்​திர​மாக இருக்க வேண்​டிய இடத்​தில் இருப்​பார்​கள்.

தமிழகத்​தில் பதற்​ற​மான சூழல் உரு​வாகி​யுள்​ளது. 699 சிறுமிகள் பாலியல் குற்​றங்​களால் பாதிக்​கப்​பட்​டுள்​ளனர். இந்​தி​யா​வில் இதை​விட மோச​மான ஆட்சி இது​வரை நடந்​த​தில்​லை. இவ்​வாறு அவர் பேசி​னார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *