பழனிசாமி, சி.​வி.சண்​முகம் தரப்​பினர் தனித்​தனி​யாகத் தொடர்ந்து தீவிர ஆலோ​சனை!! பேரவைத் தலைவர் முடிவுக்காக காத்திருப்பு…

சென்னை:
பழனிசாமி, சி.​வி.சண்​முகம் தரப்​பினர் தனித்​தனி​யாகத் தொடர்ந்து தீவிர ஆலோ​சனை​யில் ஈடுபட்டனர். பேரவைத் தலைவர் முடிவுக்காக இருதரப்பினரும் காத்திருக்கின்றனர்.

தேர்தல் தோல்விக்குப் பின் அதிமுக பொதுச்செயலாளர் பழனி​சாமிக்கு எதி​ராகப் சி.வி.சண்முகம் தரப்பினர் பகிரங்​க​மாகவே போர்க்​கொடி தூக்​கியதுடன், 25 எம்எல்ஏக்கள் சட்​டப்​பேர​வை​யில் தவெக அரசுக்கு ஆதர​வாக​வும் வாக்​களித்​தனர்.

இதனால், அதிர்ச்​சி​யடைந்த பழனி​சாமி, தவெக அரசுக்கு ஆதர​வாக வாக்​களித்த எம்​எல்​ஏ-க்​களின் கட்​சிப் பதவி​களைப் பறித்து அதிரடி நடவடிக்கை எடுத்​தார்.

அதே​நேரத்​தில், பழனி​சாமி தங்​களை மாவட்​டச் செய​லா​ளர் உள்​ளிட்ட பொறுப்​பு​களில் இருந்து நீக்​கியது செல்​லாது என சண்​முகம் தரப்பு அதிரடி​யாக அறி​வித்​துள்​ளது.

மேலும், சட்​டப்​பேர​வை​யில் தங்​களின் நிலைப்​பாடு குறித்து இருதரப்​பும் சபா​நாயகரைத் தனித்​தனி​யாகச் சந்​தித்து மனு அளித்​துள்​ளனர்.

இருதரப்பினரும் நேற்று தனித்​தனி​யாக அவசர ஆலோ​சனை​யில் ஈடு​பட்​டனர். இதுகுறித்து அதி​முக உள்​விவ​கார வட்​டாரங்​கள் கூறிய​தாவது: பழனி​சாமி தனது சென்னை இல்​லத்​தில் ஆதர​வாளர்​களு​டன் நேற்று அவசர ஆலோ​சனை நடத்​தி​னார்.

அப்​போது பேசிய பெரும்​பாலான நிர்​வாகி​கள், ‘‘கட்​சித் தலை​மை​யின் உத்​தரவை மீறி, தவெக அரசுக்கு ஆதர​வாக வாக்​களித்த அதி​முக எம்​.எல்​.ஏ-க்​களை உடனடி​யாகத் தகுதி நீக்​கம் செய்​யக் கோரி நீதி​மன்​றத்​தில் வழக்கு தொடர வேண்​டும்’’ என வலி​யுறுத்​தினர்.

அதற்​குப் பதிலளித்த பழனி​சாமி, ‘‘இந்த விவ​காரத்​தில் பேரவைத் தலைவர் முதலில் என்ன முடிவை அறிவிக்​கிறார் என்று பொறுத்​திருந்து பார்ப்​போம்.

அதன் பிறகு நமது அடுத்​தகட்ட சட்ட நடவடிக்​கைகளை எடுப்​போம்’’ என நிர்​வாகி​களை அமை​திப்​படுத்​தி​யுள்​ளார் என்ற தகவல் வெளி​யாகி​யுள்​ளது.

இதே​போல், சி.​வி.சண்​முகம்தரப்​பும் தனது தற்​காலிக அலு​வல​கத்​தில் முக்​கிய நிர்​வாகி​களு​டன் ஆலோ​சனைக் கூட்​டத்தை நடத்​தி​யது.

கூடிய விரை​வில் கட்​சி​யின் பொதுக்​குழு உறுப்​பினர்​களிடம் கையெழுத்து பெற்​று, அவசரப் பொதுக்​குழு​வைக் கூட்ட வேண்​டும் என அவர்​கள் முடிவு செய்​துள்​ள​தாக கூறப்​படு​கிறது.

இருதரப்​பின் இந்த முட்​டல் மோதல்​களால் அதி​முக​வில் பெரும் பரபரப்பு ஏற்​பட்​டுள்​ளது. இவ்​வாறு அந்த வட்​டாரங்​கள் தெரி​வித்​தன.

இதற்​கிடையே, சண்முகம் தரப்பு ஆலோ​சனைக் கூட்​டம் முடிந்த பிறகு வெளி​யில் வந்த முன்​னாள் அமைச்​சர் எஸ்​.பி.வேலுமணி​, ‘‘அடுத்​தகட்ட நகர்வு குறித்து விரை​வில் அதி​காரப்​பூர்​வ​மாக அறிவிக்​கப்​படும்’ என்று கூறி​விட்​டு புறப்​பட்​டுச்​ சென்​றார்​.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *