சசிகலா, டிடிவி தினகரன், ஓ.பன்னீர் செல்வம் உள்ளிட்டோருக்கு எக்காலத்திலும் அதிமுகவில் இடமில்லை – அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி !!

சசிகலா, டிடிவி தினகரன், ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோருக்கு எக்காலத்திலும் அதிமுகவில் இடமில்லை என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாக மறுப்பு தெரிவித்துள்ளார்.

மக்களவைத் தேர்தல் தோல்வி தொடர்பாக மூன்றாவது நாளாக அரக்கோணம், தஞ்சை தொகுதி அதிமுக நிர்வாகிகளுடன் அக்கட்சி பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை மேற்கொண்டார்.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் ஆலோசனை நடைபெற்றது. நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் தொடர்பாக எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார். கூட்டத்தில் தொகுதியின் வேட்பாளர், மாவட்ட செயலாளர், தொகுதி பொறுப்பாளர், சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னாள் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் , உட்பட நூற்றுக்கும் மேற்பட்ட நிர்வாகிகள் கலந்துக்கொண்டனர்.

அப்போது ஓபிஎஸ், சசிகலாவின் ஆதரவாளர்களை அதிமுகவில் இணைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என நிர்வாகிகளுக்கு எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தினார். ஆனால் சசிகலா மற்றும் ஓபிஎஸ் அண்ணா திமுகவில் சேர்க்க மாட்டோம் என எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

இதேபோல் ஓ.பன்னீர்செல்வம் அதிமுகவுக்கு விஸ்வாசமாக இருந்ததாக வரலாறே கிடையாது… அவர் சுயநலம் பிடித்தவர்… அவரை அதிமுகவில் இணைக்கும் பேச்சுக்கே இடமில்லை… என்றும் எடப்பாடி பழனிசாம் கூறியுள்ளார்.

மக்களவை தேர்தல் முடிவுகள் தொடர்பாக கட்சி நிர்வாகிகளிடம் பேசிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, கட்சியில் இளைஞர்களை அதிக அளவில் சேர்த்து பொறுப்புகளை வழங்குவதோடு, அதிமுக அரசின் சாதனைகளை மக்களிடம் கொண்டு போய் சேர்க்கவும் நிர்வாகிகளை வலியுறுத்தியுள்ளார்

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *