புதுச்சேரி அரசு மருத்துவமனை தூய்மைப் பணியில் ரோபாடிக் இயந்திரம் மூலம் தூய்மைப்படுத்தும் பணி இன்று துவங்கி வைத்த முதல்வர் ரங்கசாமி!!

புதுச்சேரி:
புதுச்சேரி மகளிர் மற்றும் குழந்தைகள் நல அரசு மருத்துவமனையை ரோபாடிக் இயந்திரம் மூலம் தூய்மைப்படுத்தும் பணி இன்று துவங்கியது.

புதுவை ராஜீவ்காந்தி அரசு பெண்கள், குழந்தைகள் நல மருத்துவமனையில் அனைவருக்கும் இலவச சிகிச்சை அளிக்கப்படுகிறது. மத்திய அரசு இந்த மருத்துவமனையின் மகப்பேறு அறுவை சிகிச்சை அரங்கு, பிரசவ வார்டின் தரத்தை மேம்படுத்தியமைக்காக லக்க்ஷ்யா என்ற தேசிய சான்றிதழ் வழங்கியுள்ளது.

புதுவையில் முதல்முறையாக இந்த மருத்துவமனைக்கு இந்த சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.

மேலும், தேசிய அங்கீகார வாரியம் நுழைவு நிலை சான்றிதழும் வழங்கியுள்ளது. இந்த சான்றிதழை தமிழகம், புதுவையில் முதல்முறையாக இந்த மருத்துவமனை பெற்றுள்ளது.

இந்த சான்றிதழ்களை முதல்வர் ரங்கசாமி, மருத்துவ கண்காணிப்பாளர் அய்யப்பன், தரம் நோயாளி பாதுகாப்பு நோடல் அதிகாரி குருபிரசாத் ஆகியோரிடம் வழங்கினார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *