தமிழகத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையிலான வரிப் பகிர்வுக் கொள்கை மாற்றியமைக்கப்பட வேண்டும் – அன்புமணி வலியுறுத்தல்!!

வரிப்பகிர்வில் தமிழகத்திற்கான பங்கை பாதியாக குறைத்திருப்பது பெரும் அநீதி என பாமக தலைவர் ராமதாஸ் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக 16-ஆம் நிதி ஆணையத் தலைவருக்கு அன்புமணி இராமதாஸ் எழுதியுள்ள கடிதத்தில், மத்திய அரசின் வரி வருவாயில் தமிழகத்திற்கான பங்கு கடந்த ஒன்பதாம் நிதி ஆணையத்தின் காலத்தில் 7.931% இருந்ததாவும், இப்போது அது 4.09 %, அதாவது பாதியாக குறைக்கப்பட்டிருப்பது அநீதி என்றும் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் குற்றஞ்சாட்டி உள்ளார்.

தமிழகத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையிலான வரிப் பகிர்வுக் கொள்கை மாற்றியமைக்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக, தமிழ்நாட்டில் பயணம் மேற்கொண்டுள்ள 16-ஆம் நிதி ஆணையத்தின் தலைவர் முனைவர் அர்விந்த் பனகாரியாவுக்கு அவர் கடிதம் எழுதியுள்ளார்.

சென்னையில் இன்று பிற்பகலில் அவரிடம் ஒப்படைக்கப்பட்ட அந்தக் கடிதத்தின் விவரத்தை குறிப்பிட்டுள்ளார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *