ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது டெஸ்டிலும் சுப்மன்கில் ஆடுவது சந்தேகமே !!!!

அடிலெய்டு:
இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையே பெர்த்தில் நடந்த முதல் டெஸ்டில் இந்தியா 295 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 2-வது டெஸ்ட் போட்டி வருகிற 6-ந் தேதி பகல்-இரவாக அடிலெய்டுவில் தொடங்குகிறது. இந்த டெஸ்டுக்கு முன்பு இந்திய அணி ஆஸ்திரேலிய பிரதமர் லெவலுடன் 2 நாள் பயிற்சி ஆட்டத்தில் விளையாடுகிறது. இந்தப் போட்டி வருகிற 30 மற்றும் 1-ந் தேதிகளில் கான் பெராவில் நடக்கிறது.

இடது கட்டை விரலில் ஏற்பட்ட காயம் காரணமாக இந்திய வீரர் சுப்மன்கில் முதல் டெஸ்டில் விளையாடவில்லை. 2-வது டெஸ்டிலும் அவர் ஆடுவது சந்தேகமே.

10 முதல் 14 நாட்கள் வரை சுப்மன்கில் ஓய்வில் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. காயத்தில் இருந்து அவர் முழுமையாக குணமடையவில்லை. இதனால் அடிலெய்டு டெஸ்டில் விளையாட மாட்டார் என்று கூறப்படுகிறது.

அவரது இடமான 3-வது வரிசையில் ஆடிய தேவ்தத் படிக்கல் பெர்த் டெஸ்டில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. முதல் இன்னிங்சில் ரன் எதுவும் எடுக்காமலும், 2-வது இன்னிங்சில் 25 ரன்னிலும் ஆட்டம் இழந்தார். இதனால் 2-வது டெஸ்டில் படிக்கல் கழற்றி விடப்படலாம்.

இதற்கிடையே 2-வது டெஸ்ட் போட்டிக்கான ஆஸ்திரேலிய அணியில் மாற்றமில்லை என்று அந்நாட்டு தலைமை பயிற்சியாளர் மெக்டோனால்டு அறிவித்துள்ளார். முதல் டெஸ்டில் விளையாடிய வீரர்களே அடிலெய்டு டெஸ்டில் இடம்பெற்று இருப்பார்கள்.

மிச்சேல் மார்ஷ் உடல் தகுதியை பொறுத்து பின்னர் முடிவு செய்யப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். லபுஷேன் மீண்டும் நல்ல நிலைக்கு திரும்புவார் என்றும் மெக்டொனால்டு நம்பிக்கை தெரிவித்தார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *