கஞ்சா வியாபாரிகளுடன் தொடர்பில் இருந்ததாக, நடிகர் மன்சூர் அலிகானின் மகன் அலிகான் துக்ளக் கைது!!

கஞ்சா வியாபாரிகளுடன் தொடர்பில் இருந்ததாக, நடிகர் மன்சூர் அலிகானின் மகன் அலிகான் துக்ளக் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு கஞ்சா வியாபாரிகள் சிலர் கைது செய்யப்பட்டனர். இந்த நிலையில், கைதான கஞ்சா வியாபாரிகளோடு நடிகர் மன்சூர் அலிகானின் மகன் அலிகான் துக்ளக் தொடர்பில் இருந்ததாக கூறப்படுகிறது.

இது தொடர்பாக நடிகர் மன்சூர் அலிகானின் மகன் அலிகான் துக்ளக்கிடம் போலீசார் விசாரணை நடத்தினர். நேற்று முழுவதும் அலிகான் துக்ளக்கிடம் திருமங்கலம் போலீசார் விசாரணை நடத்தினர்.

இந்த நிலையில், கஞ்சா வியாபாரிகளுடன் தொடர்பில் இருந்ததாக, நடிகர் மன்சூர் அலிகானின் மகன் அலிகான் துக்ளக் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஏற்கனவே கல்லூரி மாணவர்கள் உட்பட 10 பேரை ஜெ.ஜெ.நகர் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

தொடர்ந்து நடிகர் மன்சூர் அலிகான் மகன் அலிகான் துக்ளக் உள்ளிட்ட 4 பேரை பிடித்து விசாரணை மேற்கொண்ட நிலையில் 4 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மன்சூர் அலிகானின் மகன் அலிகான் துக்ளக், செயது சாகி, மொஹம்மது ரியாஸ் அலி, பைசல் அஹமது ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *