”வாய்ப்புண் குணமாக உதவும் தேங்காய் பால்”!!

பொதுவாக வாய்ப்புண்ணுக்கு முக்கிய காரணம் மன அழுத்தம் தான். மேலும் வெற்றிலை, புகையிலை, பான்மசாலா போடுபவர்கள், புகை பிடிப்பவர்கள், மது அருந்துபவர்கள், ஆகியோருக்கும் வரலாம் .இதை எப்படி தவிர்க்கலாம் என்று இப்பதிவில் நாம் காணலாம்.

  1. ஊட்ட சத்து குறைபாடு உள்ளோருக்கு இந்த வாய் புண் வரலாம் . ஆண்களை விட பெண்களுக்கு இந்த புண் வரலாம் .

2.காரணம் அவர்களின் மாதவிடாய் காலங்களில் ஹார்மோன் மாற்றம் வருவதாலும் ,கருத்தடை மாத்திரைகள் அதிகம் எடுப்பதால் இந்த தொல்லை அதிகம் .

3.வாய்ப்புண் குணமாக தேங்காய் பால் எடுத்து அதை வைத்து தினமும் 3-4 முறை வாய் கொப்புளிக்கவும்.

4.வாய்ப்புண் குணமாக ஒரு டம்ளர் குளிர்ந்த நீரும், ஒரு டம்ளர் சூடான தண்ணீரும் எடுத்து இரண்டையும் மாற்றி மாற்றி வாய் கொப்புளிக்கவும். இது மௌத் அல்சர்க்கு நல்ல தீர்வாக அமைந்து சீக்கிரம் நிவாரணம் கிடைக்கும் .

5.2 கப் தண்ணீர் கொதிக்க வைத்து, அதில் 1 கப் வெந்தய கீரை சேர்த்து நீக்கி விடவும். இதை சிறிது நேரம் அப்படியே மூடி வைக்கவும். இந்த தண்ணீரை வடிகட்டி தினமும் இரண்டு அல்லது மூன்று முறை வாய் கொப்புளித்தால் வாய்ப்புண் குணமாகும் .

  1. 1 கப் தண்ணீரில் 1 தேக்கரண்டி தனியா சேர்த்து கொதிக்கவிடவும். லேசாக சூடானதும் வடிகட்டி இதை வைத்து வாய் கொப்புளிக்கவும். ஒரு நாளைக்கு 3-4 முறை இதை பின்பற்றி வந்தால் வாய்ப்புண் காணாமல் போகும்
SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *