பொதுவாக வாய்ப்புண்ணுக்கு முக்கிய காரணம் மன அழுத்தம் தான். மேலும் வெற்றிலை, புகையிலை, பான்மசாலா போடுபவர்கள், புகை பிடிப்பவர்கள், மது அருந்துபவர்கள், ஆகியோருக்கும் வரலாம் .இதை எப்படி தவிர்க்கலாம் என்று இப்பதிவில் நாம் காணலாம்.
- ஊட்ட சத்து குறைபாடு உள்ளோருக்கு இந்த வாய் புண் வரலாம் . ஆண்களை விட பெண்களுக்கு இந்த புண் வரலாம் .
2.காரணம் அவர்களின் மாதவிடாய் காலங்களில் ஹார்மோன் மாற்றம் வருவதாலும் ,கருத்தடை மாத்திரைகள் அதிகம் எடுப்பதால் இந்த தொல்லை அதிகம் .
3.வாய்ப்புண் குணமாக தேங்காய் பால் எடுத்து அதை வைத்து தினமும் 3-4 முறை வாய் கொப்புளிக்கவும்.
4.வாய்ப்புண் குணமாக ஒரு டம்ளர் குளிர்ந்த நீரும், ஒரு டம்ளர் சூடான தண்ணீரும் எடுத்து இரண்டையும் மாற்றி மாற்றி வாய் கொப்புளிக்கவும். இது மௌத் அல்சர்க்கு நல்ல தீர்வாக அமைந்து சீக்கிரம் நிவாரணம் கிடைக்கும் .
5.2 கப் தண்ணீர் கொதிக்க வைத்து, அதில் 1 கப் வெந்தய கீரை சேர்த்து நீக்கி விடவும். இதை சிறிது நேரம் அப்படியே மூடி வைக்கவும். இந்த தண்ணீரை வடிகட்டி தினமும் இரண்டு அல்லது மூன்று முறை வாய் கொப்புளித்தால் வாய்ப்புண் குணமாகும் .
- 1 கப் தண்ணீரில் 1 தேக்கரண்டி தனியா சேர்த்து கொதிக்கவிடவும். லேசாக சூடானதும் வடிகட்டி இதை வைத்து வாய் கொப்புளிக்கவும். ஒரு நாளைக்கு 3-4 முறை இதை பின்பற்றி வந்தால் வாய்ப்புண் காணாமல் போகும்