ராமேஸ்வரம் ;
ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து திங்கட்கிழமை சுமார் 300-க்கும் மேற்பட்ட விசைப்படகில் மீனவர்கள் மீன்பிடி அனுமதிச்சீட்டு பெற்று மீன்பிடிக்க கடலுக்குச் சென்று கச்சத்தீவு பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் சங்கர், அர்ஜுனன், முருகேசன், ஆகிய மூன்று மீனவர்களையும் ஒரு விசைப்படகையும் இலங்கை கடற்படை எல்லை தாண்டி வந்ததாக கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
கைது செய்யப்பட்ட மீனவர்களையும் படகுகளையும் விடுதலை செய்ய வலியுறுத்தி ராமேஸ்வரம் மீனவர்கள் இன்று ஒருநாள் அடையாள வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
போராட்டத்தின் காரணமாக 800க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மீன் பிடிக்க கடலுக்கு செல்லாமல் படகுகளை கரையோரம் நன்குறமிட்டு நிறுத்தி வைத்துள்ளனர்.
இதனால் நேரடியாகவும் மறைமுகமாகவும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் வேலை இழந்துள்ளனர் .
மத்திய ஒன்றிய அரசு இலங்கை அரசுடன் பேசி மீனவர்களின் படகுகளையும் விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.