திருப்பூர் பெருமாநல்லூர் கொண்டத்துக் காளியம்மன் கோவிலில் நாளை குண்டம் திருவிழா!!

திருப்பூர்:
திருப்பூர் பெருமாந ல்லூரில் உள்ள பிரசித்தி பெற்ற கொண்டத்து க்காளியம்மன் கோவிலில், குண்டம் திருவிழா, கடந்த 2-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. நாளை (8-ந்தேதி) செவ்வாய்க்கிழமை அதிகாலை பக்தர்கள் குண்டம் இறங்கு கின்றனர். மேலும் நாளை மாலை தேரோட்டம் நடைபெற உள்ளது.

குண்டம் இறங்கவும், தேரோட்டத்தில் பங்கேற்கவும் ஏராளமான பக்தர்கள் கோவிலில் குவிந்து வருகின்றனர். இதையொட்டி கூடுதல் எஸ்.பி.,க்கள் 2 பேர் தலைமையில், 3 டி.எஸ்.பி.,க்கள், 11 இன்ஸ்பெக்டர்கள், 32 சப்-இன்ஸ்பெக்டர்கள், 158 போலீசார், 80 ஆயுதப்படை போலீசார், 200 ஊர் காவல் படையினர், 50 டிராபிக் வார்டன் ஆகியோர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.

மேலும் கோவில் வளாக த்தில் புறக்காவல் நிலையம் மற்றும் 2 இடங்களில் உயர் கண்காணிப்பு கோபுரமும் அமைக்கப்பட்டு உள்ளது.பக்தர்கள் வசதிக்காக கோவில் வளாகம் முழுவதும் பந்தல் அமைக்கப்பட்டுள்ளது.


60 இடங்களில் மொபைல் டாய்லெட், 9 இடங்களில் குடிநீர் வசதி, பக்தர்கள் குண்டம் இறங்கு வதை பார்க்க 2 இடங்களில் எல்.இ.டி., திரை, குண்டம் இறங்கும் பக்தர்கள் வரிசையாக செல்ல தடுப்பு, குண்டம் இறங்கும் பக்தர்கள் குளிக்க 20 ஷவர் கொண்ட அறை உள்ளிட்ட வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

வாகன போக்குவரத்து நெரிசலை சமாளிக்க பெருமால்லூரில் இன்று மதியம் 1 மணி முதல் நாளை இரவு 10 மணிவரை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.


அதன்படி கோபியில் இருந்து திருப்பூர் செல்லும் வாகனங்கள் குன்னத்தூர் பாலம் சர்வீஸ் ரோடு வழியாக ஸ்தூபி வரை வந்து, அங்கிருந்து கணக்கம்பாளையம் வாவிபாளையம், பூலுவப்பட்டி வழியாக திருப்பூருக்கு செல்ல வேண்டும்.

சேலம், ஈரோட்டில் இருந்து கோவை நோக்கி செல்லும் வாகனங்கள் ஸ்தூபி பிரிவு அருகே வந்து பயணிகளை இறக்கிவிட்டு மீண்டும் வலசுபாளையம் பிரிவு சர்வீஸ் ரோடு சென்று தேசிய நெடுஞ்சாலை அடைந்து கோவை செல்ல வேண்டும்.

திருப்பூரில் இருந்து கோபி, ஈரோடு பகுதிகளுக்கு செல்லும் வாகனங்கள் பூலுவப்பட்டி சிக்னல் வழியாக நெருப்பெரிச்சல், வாவிபாளையம் வழியாக சென்று கணக்கபாளையம் பிரிவு ஸ்தூபி அருகே வந்து பயணிகளை ஏற்றி இறக்கி கொண்டு வலசு பாளையம் வழியாக சர்வீஸ் ரோடு சென்று தேசிய நெடுஞ்சாலை அடைந்து அங்கிருந்து செல்ல வேண்டும் வேண்டும்.

கோவையில் இருந்து ஈரோடு செல்லும் வாகனங்கள் குன்னத்தூர் பாலம் அருகே வந்து பாலத்தின் கீழ் பயணிகளை இறக்கி விட்டு தேசிய நெடுஞ்சாலை அடைந்து செல்ல வேண்டும். மேலும் பயணிகள் வசதிக்காக குண்டம் திருவிழாவிற்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.

குண்டம் திருவிழா முடிந்து ஸ்தூபியில் இருந்து திருப்பூர், கோபி, ஈரோடு செல்லும் பக்தர்கள் ஸ்தூபியில் இருந்து பஸ்களில் ஏறி செல்லலாம். இதற்காக ஸ்தூபி பகுதியில் சிறப்பு பஸ்கள் நிறுத்தப்பட்டிருக்கும்.


இதேபோல் கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காகவும், பக்தர்களின் வசதிக்கேற்பதாகவும் பார்க்கிங் வசதி செய்யப்பட்டுள்ளது.

கோபி, ஈேராடு பகுதியில் இருந்து கோவிலுக்கு வரும் பக்தர்கள் தங்களது நான்கு சக்கர மற்றும் இரண்டு சக்கர வாகனங்களை ஸ்தூபி அருகே கணக்கம்பாளையம் ரோடு பகுதியில் நிறுத்த தனியார் இடத்தில் வசதி செய்யப்பட்டுள்ளது.

திருப்பூரில் இருந்து கோவிலுக்கு வரும் பக்தர்கள் தங்களது வாகனங்களை பெருமாநல்லூர் பெண்கள் மேல்நிலைப்பள்ளி எதிரிலும், காளியம்மன் கோவில் அருகிலும், காதி கிராப்ட் வளாகத்திலும் பார்க்கிங் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

விழாவிற்கு வரும் பக்தர்கள் தங்கள் உடமைகளை பத்திரமாக பார்த்துக் கொள்ள வேண்டும். தங்களது குழந்தைகள் அணிந்து வரும் விலையுயர்ந்த ஆபரணங்கள், பொருட்கள் ஆகியவற்றை பெற்றோர் கவனமாக பார்த்துக்கொள்ள வேண்டும்.

பொதுமக்களின் வசதிக்காக கோவில் வளாகத்திலேயே காவல் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது.

பக்தர்கள் பாதுகாப்பிற்காக அவசர உதவி எண் 100 தொடர்பு கொள்ளலாம் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *