சென்னை:
தமிழகம் முழுவதும் 12-ம் வகுப்புக்கான தேர்வுகள் முடிவடைந்து வினாத்தாள்களை திருத்தும் பணிகள் நடைபெற்றது. இதனை தொடர்ந்து நாளை மறுநாள் (அதாவது 8-ந்தேதி) 12-ம் வகுப்புக்கான தேர்வு முடிவுகள் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தேர்வு முடிவுகளை மாணவர்கள் அறிந்து கொள்ளும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
முன்னதாக, வருகிற 9-ந்தேதி பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது ஒருநாளைக்கு முன்னதாக தேர்வு முடிவுகள் வெளியாகிறது குறிப்பிடத்தக்கது