இரு கைகளும் இல்லாத, தனது கால் மூலம் பவுலிங் செய்து அசத்திய அமீர் – பாராட்டிய சச்சின்!!

இந்தியன் ஸ்டிரீட் பிரீமியர் லீக் தொடரின் முதல் சீசன் நேற்று பிரம்மாண்டமாக தொடங்கியது. இதில், அணியின் உரிமையாளர்களான சூர்யா, அமிதாப் பச்சன், அக்ஷய் குமார், ஹிருத்திக் ரோஷன், ராம் சரண் மற்றும் சைஃப் அலி கான் மற்றும் கரீனா கபூர் கான் ஆகியோர் கலந்து கொண்டு முதல் சீசனை தொடங்கி வைத்தனர்.

தொடக்க விழாவில் சச்சின் டெண்டுல்கர், அக்ஷய் குமார், ராம் சரண் மற்றும் சூர்யா ஆகியோர் இணைந்து நாட்டு நாட்டு பாடலுக்கு டான்ஸ் ஆடினர். இந்த வீடியோ வைரலானது.

இந்த நிலையில் தான் இந்த தொடக்க விழாவில் அமீர் ஹூசைன் லோனி மற்றும் அவரது குடும்பத்தினரை அழைத்து வந்த சச்சின் டெண்டுல்கர் அவர்களை கௌரவப்படுத்தியுள்ளார்.

ஜம்மு காஷ்மீரின் பிஜ்பெஹாராவில் உள்ள வகாமா கிராமத்தைச் சேர்ந்தவர் மாற்றுத்திறனாளி கிரிக்கெட் வீரர் அமீர் ஹூசைன் லோனி. தற்போது 34 வயதாகும் அமீர் ஜம்மு காஷ்மீரின் பாரா கிரிக்கெட் அணியின் கேப்டனாக இருக்கிறார்.

இவரது அசாத்திய திறமை என்னவென்றால், இரண்டு கையும் இல்லை, ஆனாலும் கிரிக்கெட் மீதான ஆர்வம் அவரை கிரிக்கெட் விளையாட தூண்டியது. எப்படி என்றால், தனது கழுத்தை பயன்படுத்தி கிரிக்கெட் பேட்டை பிடித்து அதனைக் கொண்டு பேட்டிங் செய்து வருகிறார்.

இந்த போட்டியில் சச்சின், அமீர் என்று பெயரிடப்பட்ட ஜெர்சியிலும், அமீர் டெண்டுல்கர் என்று பெயரிடப்பட்ட ஜெர்சியும் அணிந்து விளையாடினர். நேற்று நடந்த சிறப்பு போட்டியில் கில்லாடி 11 மற்றும் மாஸ்டர்ஸ் 11 அணிகள் விளையாடின.

இதில், சச்சின், அமீர், முனாப் படேல், யூசுப் பதான் சுரேஷ் ரெய்னா ஆகியோர் மாஸ்டர் அணிக்காக விளையாடினர். இதே போன்று அக்ஷய் குமார், நடிகர் சூர்யா, பிரவீன் குமார், ராபின் உத்தப்பா, இர்பான் பதான் ஆகியோர் கில்லாடி 11 அணிக்காக விளையாடினர்.

முதலில் பேட்டிங் செய்த மாஸ்டர்ஸ் அணிக்கு தொடக்க வீரர்களாக சச்சின் – அமீர் களமிறங்கினர். மேலும் இரு கைகளும் இல்லாத அமீர் தனது கால் மூலம் பவுலிங் செய்து அசத்தினார். மேலும் சச்சின் ஓவரில் கீப்பர் பின்னாடி அடிக்கப்பட்ட ஒரு பந்தை வேகமாக துரத்தி பிடித்தார். இந்த செயலை பார்த்த சச்சின் உள்பட பல வீரர்கள் அவரை பாராட்டினர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *