கொல்கத்தா,
கொல்கத்தா ஐகோர்ட்டு நீதிபதியாக இருந்த அபிஜித் கங்கோபாத்யாய் இன்று பா.ஜ.க.வில் இணைந்தார். மாநிலக் கட்சித் தலைவர் சுகந்தா மஜும்தார், லோபி சுவேந்து அதிகாரி மற்றும் பலர் முன்னிலையில் அவர் பா.ஜ.க.வில் தன்னை இணைத்து கொண்டார்.
பா.ஜ.க.வில் இணைந்த பின்னர் அபிஜித் கங்கோபாத்யாய் கூறியதாவது:-
இன்று நான் ஒரு புதிய துறையில் சேர்ந்துள்ளேன். பா.ஜ.க.வில் இணைவதில் மகிழ்ச்சி அடைகிறேன். பா.ஜ.க.வில் வீரனாக பணியாற்றுவேன். ஊழல் நிறைந்த திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சியை மேற்கு வங்காளத்தில் இருந்து அகற்றுவதே எங்கள் நோக்கம். என்று கூறினார்.
அபிஜித் கங்கோபாத்யாய் தனது நீதிபதி பதவியை கடந்த 5-ம் தேதி ராஜினாமா செய்த நிலையில், இன்று பா.ஜ.க.வில் இணைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது .