கரூர் சம்​பவம் குறித்து மத்​திய உள்​துறை அமைச்​சகம் கேட்ட விளக்​கத்​துக்கு தமிழக அரசு பதில் கொடுக்க வேண்​டும் – எல்​.​முருகன் வலியுறுத்தல்!!

சென்னை:
கரூர் சம்​பவம் குறித்து மத்​திய உள்​துறை அமைச்​சகம் கேட்ட விளக்​கத்​துக்கு தமிழக அரசு பதில் கொடுக்க வேண்​டும் என மத்​திய இணை அமைச்​சர் எல்​.​முரு​கன் வலி​யுறுத்தி உள்​ளார்.

சென்னை விமான நிலை​யத்​தில் மத்​திய இணை அமைச்​சர் எல்​.​முரு​கன் செய்​தி​யாளர்​களிடம் நேற்று கூறிய​தாவது: கரூரில் நடந்த சம்​பவம் மிக​வும் வருந்​தத்​தக்​கது. இப்​படி ஒரு சம்​பவம் நடந்​திருக்​கக் கூடாது.

கூட்ட நெரிசலில் சிக்கி பலர் தங்​களது இன்​னு​யிரை இழந்​திருக்​கின்​றனர். அவர்​களின் குடும்​பத்​துக்கு எனது ஆழ்ந்த இரங்​கல்.

இச்​சம்​பவம் குறித்து தகவல் அறிந்​ததும், மத்​திய உள்​துறை அமைச்​சர் அமித் ஷா, தமிழக முதல்​வரை தொடர்பு கொண்டு நிலை​மையை கேட்​டறிந்​தார். மேலும், தேவை​யான அனைத்து உதவி​களும் செய்து தரப்​படும் என தமிழக முதல்​வர் ஸ்டா​லினிடம் தெரிவித்​தார்.

கரூர் விவ​காரம் குறித்​து, மத்​திய உள்​துறை அமைச்​சகம், தமிழக அரசிடம் உரிய விளக்​கம் கேட்​டுள்​ளது. மத்​திய உள்​துறை அமைச்சகம் கேட்ட விளக்​கத்​துக்கு தமிழக அரசு பதில் அளிக்க வேண்​டும்.

தமிழக அரசு பதில் கொடுத்த பிறகு, அதுபற்றி விரி​வாக பேசலாம். இவ்வாறு அவர் கூறினார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *