காஸ் டேங்​கர் லாரி​ உரிமை​யாளர்​கள் கால​வரையற்ற வேலைநிறுத்​தப் போராட்​டத்தை அறி​வித்​துள்​ளதால், 5 மாநிலங்​களில் சமையல் காஸ் தட்​டுப்​பாடு ஏற்​படும் அபா​யம்!!

நாமக்​கல்:
காஸ் டேங்​கர் லாரி​ உரிமை​யாளர்​கள் கால​வரையற்ற வேலைநிறுத்​தப் போராட்​டத்தை அறி​வித்​துள்​ளதால், 5 மாநிலங்​களில் சமையல் காஸ் தட்​டுப்​பாடு ஏற்​படும் அபா​யம் உரு​வாகி​யுள்​ளது.

தமிழ்​நாடு, கேரளா, கர்​நாட​கா, ஆந்​தி​ரா, தெலங்​கா​னா, புதுச்​சேரி மாநிலங்​களை உள்​ளடக்​கிய தென்​மண்டல காஸ் டேங்​கர் லாரி உரிமை​யாளர்​கள் சங்​கம் நாமக்​கல்லில் இயங்கி வரு​கிறது.

இந்த சங்​கத்​தில் உள்ள காஸ் டேங்​கர் லாரி​கள், இந்​தி​யன் ஆயில், பாரத் பெட்​ரோலி​யம், ஹிந்​துஸ்​தான் பெட்​ரோலி​யம் ஆகிய நிறு​வனங்​களுக்கு சொந்​த​மான எண்​ணெய் சுத்​தி​கரிப்பு நிலை​யங்​களில் இருந்து பாட்​டிலிங் மையங்​களுக்கு சமையல் காஸ் கொண்டு செல்​லும் பணிக்கு ஒப்​பந்த அடிப்​படை​யில் பயன்​படுத்​தப்​படு​கின்​றன.

மொத்​தம் 5 ஆயிரம் டேங்​கர் லாரி​கள் ஒப்​பந்த அடிப்​படை​யில் இயக்​கப்​படு​கின்​றன. இந்​நிலை​யில், இந்த ஆண்​டுக்​கான வாடகை ஒப்​பந்​தத்​தில் 700-க்​கும் அதி​க​மான காஸ் லாரி​களுக்கு வேலை​வாய்ப்பு கிடைக்​க​வில்​லை.

இந்​நிலை​யில், நாமக்​கல்​லில் தென்​மண்டல காஸ் டேங்​கர் உரிமை​யாளர்​கள் சங்க அவசரப் பொதுக்​குழுக் கூட்​டம் நேற்று நடை​பெற்​றது.

இதில் பங்​கேற்ற அகில இந்​திய மோட்​டார் டிரான்​ஸ்​போர்ட் காங்​கிரஸ் தலை​வர் சண்​முகப்​பா, பின்​னர் செய்​தி​யாளர்​களிடம் கூறிய​தாவது:

700-க்​கும் மேற்​பட்ட லாரி​களுக்கு ஒப்​பந்​தம் வழங்​காத​தால் டேங்​கர் லாரி உரிமை​யாளர்​கள் வேலை​வாய்ப்பு இழந்​து, வாகன கடனைக் கட்ட முடி​யாமல் பாதிக்​கப்​பட்​டுள்​ளனர்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *