அதானியுடன் பீகார் அரசு போட்ட மின்சார ஒப்பந்தத்தில் பெரும் ஊழல் நடந்துள்ளதாக குற்றம் சாட்டிய முன்னாள் மத்திய மின்சார அமைச்சர் ஆர்.கே. சிங்!!

அதானி பவர் லிமிடெட் நிறுவனம் பீகாரில் ரூ.27 ஆயிரம் கோடியில் 2,400 மெகாவாட் அனல் மின் உற்பத்தி நிலையத்தை அமைக்கிறது. இந்தத் திட்டத்திற்காக, பீகாரின் பாகல்பூர் மாவட்டத்தில் உள்ள பிர்பைண்டி கிராமத்தில் 25 வருடங்களுக்கு மின்சாரம் கொள்முதல் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.

இங்கு 800 மெகா வாட் திறன் கொண்ட 3 ஆலைகள் நிறுவப்படும். 5 ஆண்டுகளில் உற்பத்தி தொடங்கப்படும். இங்கு உற்பத்தி செய்யப்படும் இந்த ஒப்பந்தத்தில் மின்சாரம் பீகார் மாநிலத்துக்கு யூனிட்டுக்கு ரூ.6.075 என்ற விலையில் வழங்கப்படும்.

இந்நிலையில், பீகார் அரசுக்கும் அதானி பவர் லிமிடெட் நிறுவனத்திற்கும் இடையிலான மின்சார ஒப்பந்தத்தில் பெரும் ஊழல் நடந்துள்ளதாக முன்னாள் மத்திய மின்சார அமைச்சர் ஆர்.கே. சிங் குற்றம் சாட்டியுள்ளார்.


பீகார் அரசு அதானி பவர் லிமிடெட் நிறுவனத்துடன் 25 ஆண்டுகளுக்கு ஒரு யூனிட்டுக்கு 6 ரூபாய் என்ற அதிகமான விலையில் மின்சாரம் வாங்க ஒப்பந்தம் செய்துள்ளதாக ஆர்.கே. சிங் குற்றம் சாட்டியுள்ளார்.


2017-2024 க்கு இடையில் ஆர்.கே. சிங் மத்திய மின்சார அமைச்சராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *