அ​தி​முக நிர்​வாகி​கள் என்​னுடன் தொடர்​பில் உள்​ளனர் – அவர்​களது பெயர்​களை வெளிப்​படுத்​தி​னால் பாதிக்​கப்​படு​வார்​கள்!! செங்கோட்டையன் தகவல்…

கோவை:
அ​தி​முக நிர்​வாகி​கள் என்​னுடன் தொடர்​பில் உள்​ளனர். அவர்​களது பெயர்​களை வெளிப்​படுத்​தி​னால் பாதிக்​கப்​படு​வார்​கள் என்று முன்​னாள் அமைச்​சர் கே.ஏ.செங்​கோட்​டையன் கூறி​னார்.

கோவை விமான நிலை​யத்​தில் செய்​தி​யாளர்​களிடம் அவர் நேற்று கூறிய​தாவது: இரட்டை இலை சின்​னம் ஒதுக்​கீடு தொடர்​பாக நிலு​வை​யில் உள்ள மனு மீது விசா​ரணை நடத்த வேண்​டும் என்று தேர்​தல் ஆணை​யத்​துக்கு 250 பக்க கடிதம் அனுப்​பி​யுள்​ளேன். அதில் பல முக்​கிய விஷ​யங்​கள் உள்​ளன. தேர்​தல் ஆணைய விதி​களின்​படி அவற்றை வெளி​யில் சொல்ல முடி​யாது. அடுத்​தகட்ட நடவடிக்​கையை பொறுத்​திருந்​துப் பாருங்​கள். நல்​லதே நடக்​கும்.

அதி​முக கட்சி விவ​காரங்​களில் பழனி​சாமி​யின் மகன், மைத்​துனர், மரு​மகன் ஆகியோர் தலை​யிடு​கின்​றனர். அவர்​கள் தொகுதி வாரி​யாக சென்று கொண்​டிருக்​கின்​றனர். அவர்​களது செயல்​பாடு​கள் மூத்த நிர்​வாகி​களுக்கு இடையூறாக உள்​ளன.

அதி​முக நிர்​வாகி​கள் என்​னுடன் தொடர்​பில் உள்​ளனர். என்​னுடன் யார், யார் பேசுகின்​றனர் என்​பது அவர்​களுக்​கும், எனக்​கும் மட்​டும்​தான் தெரி​யும். அதை வெளிப்​படுத்​தி​னால், அவர்​கள் பாதிக்​கப்​படு​வார்​கள்.

நான் கடந்த 53 ஆண்​டு​களாக கட்​சி​யில் இருக்​கிறேன். என்னை தனிப்​பட்ட முறை​யில் யாரும் இயக்க முடி​யாது. மூத்த நிர்​வாகி​யான என்னை அதி​முக​வில் இருந்து நீக்​கியது ஏன் என்று பழனி​சாமி​யிடம்​தான் கேட்க வேண்​டும். மனோஜ் பாண்​டியன் தி​முக​வில் இணைந்​தது அவரது விருப்​பம்.
இவ்​வாறு அவர்​ கூறி​னார்​.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *