இப்​போதைய பார்வையாளர்கள் புத்​தி​சாலிகளாக​வும், விழிப்​புணர்​வோடும் இருக்கிறார்​கள்; அவர்​களை ஏமாற்ற முடி​யாது – நடிகை பார்வதி உறுதி!!

சென்னை:
தமிழில், பூ, மரி​யான், உத்​தம​வில்​லன், தங்​கலான் உள்பட சில படங்​களில் நடித்​துள்ள மலை​யாள நடிகை பார்​வ​தி, இந்​தி, தெலுங்கு உள்​ளிட்ட மொழிகளி​லும் நடித்து வரு​கிறார்.

அவர் அளித்​துள்ள பேட்டியில், பார்​வை​யாளர்​கள் மொழியைப் பற்றி கவலைப்​படு​வ​தில்​லை; அவர்​கள் உண்​மை​யான கதையை மட்​டுமே விரும்​பு​கிறார்​கள் என்று தெரி​வித்​துள்​ளார்.

அவர் கூறும்​போது, “இந்த மாற்​றம் அழகானது. ஏனென்​றால் அது எங்​களை மேலும் கடின​மாக உழைக்​க​வும், சினி​மாவுக்கு உண்​மை​யாக இருக்​க​வும் தூண்​டு​கிறது.

இந்தி திரைத்​துறை, தென்​னிந்​திய சினிமா போல் இல்​லாமல் பெரும்​பாலும் ஒரே மாதிரி கதைகளையே படமாக்​கு​வ​தாக முன்பு நினைத்​திருந்​தேன். இப்​போது அந்த வேறு​பாடு இல்​லை.

இன்று இந்தி சினி​மா​வில் கதை சொல்​லும் முறை, அதிக உண்​மை​யுட​னும் சோதனை முயற்​சி​யாக​வும் இருக்​கிறது.

அதே நேரம் தென்​னிந்​திய திரைப்​படங்​களும் ஓடிடி- வருகைக்கு பிறகு விரிவடைந்​துள்​ள​தால் இரண்டு துறை​யினரும் ஒரு​வருக்​கொரு​வர் கற்​றுக்​கொள்​கிறார்​கள். இந்த மாற்​றத்​துக்கு இப்​போதைய பார்​வை​யாளர்​கள்​தான் காரணம்.

அவர்​கள் புத்​தி​சாலிகளாக​வும் விழிப்​புணர்​வோடும் இருக்கிறார்​கள். அவர்​களை ஏமாற்ற முடி​யாது” என்று தெரி​வித்​துள்​ளார்​.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *