திமுக தேர்​தல் நேரத்​தில் கள்ள வாக்​களித்து வெற்​றி​பெற்று வரு​கிறது; திருட்டு வாக்​களிக்க முடி​யாது என்​ப​தால்​தான் எஸ்​ஐஆரை எதிர்க்​கி​றார்​கள்- பழனிசாமி பகிரங்க குற்றச்சாட்டு!!

சென்னை:
​திருட்டு வாக்​களிக்க முடி​யாது என்​ப​தால்​தான் எஸ்​ஐஆரை திமுக எதிர்ப்​ப​தாக அதி​முக பொதுச்​செய​லா​ளர் பழனி​சாமி தெரி​வித்​தார்.

இது தொடர்​பாக சேலத்​தில் நேற்று செய்​தி​யாளர்​களிடம் அவர் கூறிய​தாவது: திமுக-​வும் அதன் கூட்​டணி கட்​சிகளும் பல்​வேறு விமர்​சனங்​கள் செய்​தன. அதையெல்​லாம் மீறி தேசிய ஜனநாயக கூட்​டணி பிஹார் தேர்​தலில் மிகப்​பெரிய வெற்றி பெற்​றுள்​ளது.

தமி​ழ​கத்​தில் வாக்​காளர் பட்​டியலில் இறந்​தவர்​களின் பெயர்​கள் பல ஆண்​டு​களாக தொடர்ந்து இடம் பெற்று வரு​கின்​றன.

அதே​போல, வேறு இடங்​களுக்கு குடி பெயர்ந்​தவர்​களின் பெயர்​களும் வாக்​காளர் பட்​டியலில் இடம் பெற்​றுள்​ளன. எஸ்​ஐஆர் பணி மேற்​கொள்​ளும் போது, இவர்​களை எல்​லாம் கண்​டறிந்து நீக்​கப்​பட்டு உண்​மை​யான நேர்​மை​யான வாக்​காளர்​களைக் கொண்டு பட்​டியல் தயா​ரிக்​கப்​படும்.

இந்த பணி​யின்​போது பிஎல்​ஓ-க்​கள் வீடு​வீ​டாகச் சென்று படிவத்தை வழங்​கிட​வேண்​டும். ஆனால், தமி​ழ​கத்​தில் இப்​பணி சுணக்​க​மாக இருக்​கிறது. சென்னை மாநக​ராட்​சி​யில் பிஎல்​ஓ-​வாக நியமிக்​கப்​பட்​ட​வர்​கள் 4-ம் வகுப்​பு​தான் படித்​துள்​ளனர்.

இதை நாங்​கள் தெரி​வித்​தும் மாற்​றாமல், வேண்​டுமென்றே திட்​ட​மிட்டு எஸ்​ஐஆர் பணி முறை​யாக நடை​பெறக்​கூ​டாது என சில அதி​காரி​கள் செயல்​படு​கின்​ற​னர். திமுக அரசு வாய்​மொழி உத்​தர​வாக இவ்​வாறு சொல்லி இருப்​ப​தாக நாங்​கள் அறிகி​றோம். இது கண்​டிக்​கத்​தக்​கது.

பிஎல்​ஓ-க்​களாக தகு​தி​யான​வர்​களை நியமிக்​காத​தால் பல்​வேறு குளறு​படிகள் ஏற்​படு​கின்​றன. இனி மேலா​வது தேர்​தல் ஆணை​யம் விழிப்​போடு செயல்​பட்​டு, எஸ்​ஐஆர் பணிக்கு முரண்​பா​டாக செயல்​படு​வர்​களை கண்​டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்​டும்.

ஒவ்​வொரு சட்​டப்​பேர​வைத் தொகு​தி​யிலும் இறந்​தவர், இடம் பெயர்ந்​தவர், இரட்டை வாக்​குரிமை உடையோர் குறைந்​த​பட்​சம் 5 ஆயிரம் பேர் உள்​ளனர். இதுகுறித்து நாங்​கள் தொகு​தி​வாரி​யாக விவரங்​களை கொடுத்​தும் நீக்​க​வில்​லை.

இதனை பயன்​படுத்​தி, திமுக தேர்​தல் நேரத்​தில் கள்ள வாக்​களித்து வெற்​றி​பெற்று வரு​கிறது. திருட்டு வாக்​களிக்க முடி​யாது என்​ப​தால்​தான் எஸ்​ஐஆரை எதிர்க்​கி​றார்​கள். சென்னை மாநக​ராட்சி தேர்​தலில் திருட்டு வாக்​களிக்க வந்​தவரை பிடித்து கொடுத்​ததற்​காக 15 நாள் சிறை​யில் அடைத்​தார்​கள்.

அப்​படிப்​பட்ட நிலை, வரும் தேர்​தலில் வரக்​கூ​டாது என்​ப​தற்​காகத்​தான் எஸ்​ஐஆரை நாங்​கள் ஆதரிக்​கி​றோம்.

எஸ்​ஐஆர் பணியை எப்​படி​யா​வது நிறுத்த வேண்​டும் என்​ப​தற்​காக திமுக பல்​வேறு காரணங்​களை கூறி வரு​கிறது. எஸ்​ஐஆர் பணிக்கு ஒரு மாத​காலம் போது​மானது. முறை​கே​டாக வாக்​காளர்​களை சேர்ப்​பது திமுக-வுக்கு கைவந்த கலை.

ஆர்கே நகரில் மட்​டும் 31 ஆயிரம் வாக்​கு​கள் நாங்​கள் நீதி​மன்​றம் சென்​ற​தால் நீக்​கப்​பட்​டுள்​ளன. ஒரு தொகு​தி​யில் இவ்​வளவு என்​றால் அனைத்து தொகு​தி​களுக்​கும் சேர்த்து 60 லட்​சம் வாக்​கு​கள் கூட வரலாம்.

இந்த கட்சி அந்​தக் கட்சி என பார்க்​காமல், நேர்​மை​யான முறை​யில் வாக்​காளர்​கள் இடம் பெற வேண்​டும்.இவ்​வாறு அவர் கூறி​னார்​.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *