வாக்​காளர் பட்​டியல் சிறப்பு தீவிர திருத்​தம் (எஸ்​ஐஆர்) குறித்து நாடே புலம்​பும்​போது, அதை ஆதரித்து அதி​முக உச்​சநீ​தி​மன்​றம் சென்​றது வெட்​கக்​கே​டானது – முதல்வர் ஸ்டாலின் விமர்சனம் !!

​சென்​னை;

வாக்​காளர் பட்​டியல் சிறப்பு தீவிர திருத்​தம் (எஸ்​ஐஆர்) குறித்து நாடே புலம்​பும்​போது, அதை ஆதரித்து அதி​முக உச்​சநீ​தி​மன்​றம் சென்​றது வெட்​கக்​கே​டானது என்று கொளத்​தூரில் நேற்று நடை​பெற்ற பாக முகவர்​கள் கூட்​டத்​தில் முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் குற்​றஞ்​சாட்​டி​னார்.

சென்​னை, கொளத்​தூர் தொகு​தி​யில் நேற்று ‘என் வாக்​குச்​சாவடி, வெற்றி வாக்​குச்​சாவடி’ தலைப்​பில் பாக முகவர்​கள், நிர்​வாகி​கள் கூட்​டம் தமிழக முதல்​வ​ரும் கொளத்​தூர் தொகுதி உறுப்​பினரு​மான மு.க.ஸ்​டா​லின் தலை​மை​யில் நடை​பெற்​றது.

இக்​கூட்​டத்​தில் முதல்​வர் பேசி​ய​தாவது: இன்​றைக்கு நாம் எங்கு சென்​றாலும் எஸ்​ஐஆர் பற்​றி​தான் பேசுகின்​ற​னர்.

மக்​கள் ஒவ்​வொரு​வ​ரும், “நாங்​கள் இந்​திய குடிமக்​கள்​தான்” என்று நிரூபிக்க வேண்​டிய சூழ்​நிலை​யில், கட்​டா​யத்​தில் இருந்து கொண்​டிருக்​கி​றோம். காரணம், மக்​களின் வாக்​குரிமையே பறி​போகும் அளவுக்கு ஒரு சூழ்​நிலை ஏற்​பட்​டுள்​ளது. மத்​திய ஆட்​சி​யாளர்​கள் இத்​தகைய சூழலை உரு​வாக்​கி​யுள்​ளனர்.

விசா​ரணை அமைப்​பு​களைப் போல் தேர்​தல் ஆணை​யத்​தை​யும் பயன்​படுத்தி அப்​படி ஒரு சூழலை ஏற்​படுத்​தி​யுள்​ளனர். எதிர்க்​கட்​சித் தலை​வர் ராகுல் காந்தி வெளிப்​படை​யாகவே வாக்​குத் திருட்டு பற்றி குற்​றஞ்​சாட்​டி​யுள்​ளதுடன், ஆதா​ரங்​களு​டன் வெளிப்​படுத்​தி​யுள்​ளார்.

எனவே, நான் உங்​களை​யெல்​லாம் கேட்​டுக்​கொள்ள விரும்​புவது, தமி​ழ​கத்​தில் உண்​மை​யான வாக்​காளர் ஒரு​வர்​கூட பட்​டியலில் இருந்து விடு​பட்​டு​விடக் கூடாது. இதற்​காக​தான் திமுக நீதி​மன்​றம் சென்​றுள்​ளது. மக்​கள் மன்​றத்​தி​லும் விளக்​கு​கின்​றோம்.

அனைத்து கட்​சிக்​கூட்​டம், ஆர்ப்​பாட்​டம் என நம் உணர்​வு​களையெல்​லாம் தொடர்ந்து வெளிப்​படுத்​தி​யிருக்​கி​றோம். வழக்​க​மாக தேர்​தல் வெற்​றிக்​கான பொறுப்பை ஒப்​படைப்​பது போல், மக்​களு​டைய வாக்​குரிமை​யைப் பெற்​றுத்​தரும் பெரும் பொறுப்​பை​யும் கூடு​தலாக உங்​களிடம் ஒப்​படைத்​துள்​ளோம்.

நமக்கு அதிக கால அவகாசம் இல்​லை. நாம் வாக்​காள​ராக சேர ஒரு படிவம் கொடுக்​கி​றார்​கள். இன்​றைக்கு தேதி 14. பத்து நாட்​கள் முடிவடைந்​து​ விட்​டன. மீதி இருப்​பது எத்​தனை நாட்​கள் என்று உங்​களுக்​குத் தெரி​யும். அந்த விண்​ணப்​பத்தை நாம் வாங்​கிப் பார்க்​கும் போது, நமக்​குப் பெரிய குழப்​பம் வரு​கிறது.

தமி​ழ​கம் இதுகுறித்து புலம்​பிக் கொண்​டிருக்​கிறது. மேற்கு வங்க முதல்​வர் மம்தா பானர்ஜி போராட்​டம் மூலம் எதிர்ப்பை பதிவு செய்து வரு​கி​றார். கேரளா​வில் ஆளுங்​கட்​சி​யும் எதிர்க்​கட்​சி​யும் சேர்ந்து பேராட்​டம் நடத்​தி, சட்​டப்​பேர​வை​யில் தீர்​மானம் போட்டு எதிர்ப்பை வெளிப்​படுத்​தி​யுள்​ளது.


ஆனால், தமிழ்​நாட்​டில் எதிர்க்​கட்சி என்று ஒன்று இருக்​கிறது. அது எதிர்க்​கட்​சி​யாக இல்​லை. இப்​படியே சென்​று​கொண்​டிருந்​தால் எதிர்க்​கட்​சி​யாக மட்​டுமல்ல.

உதிரிக் கட்​சி​யாகக்​கூட இருக்க முடி​யாத ஒரு சூழ்​நிலை நிச்​ச​யம் ஏற்​படும். அதாவது தங்​களு​டைய கட்​சியை டெல்​லி​யில் கொண்​டு​சென்று அடமானம் வைத்​து​விட்டு அந்த எஸ்​ஐஆரை ஆதரிக்​கின்​ற​னர். எஸ்​ஐஆரை எதிர்த்து எல்லா கட்​சிகளும் உச்​சநீ​தி​மன்​றம் செல்​கி​றோம்.

ஆனால், இங்கு எதிர்க்​கட்​சி​யாக இருக்​கும் அதி​முக அதை ஆதரித்து உச்​சநீ​தி​மன்​றம் செல்​லும் வெட்​கக்​கேடு நடை​பெறுகிறது. மக்​களைச் சந்​திக்க அவர்​களுக்​குத் தெம்பு இல்​லை.

அதனால்​தான் இந்​தக் குறுக்கு வழியை அவர்​கள் நாடி​யிருக்​கி​றார்​கள். எனவே, தொகுதி முழு​வதும் ஒரு பூத் விடா​மல் சுற்​றிச் சுழல வேண்​டும்.

அந்​தக் கணக்​கீட்​டுப் படிவங்​களை நிரப்ப நாம் மக்​களுக்கு உதவி​யாக இருக்க வேண்​டும். கொளத்​தூரில் வெற்றி என்​பது, நிர்​ண​யிக்​கப்​பட்ட வெற்​றி​தான். அதில் எந்த சந்​தேக​மும் இல்​லை.இவ்​வாறு முதல்​வர் ஸ்டாலின் பேசி​னார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *