எனக்கு கடவுள் நம்​பிக்கை இல்​லை; என் தந்​தை, ஹனு​மன் என் பின்​னால் இருப்​பார் – இயக்குநர் ராஜமவுலி !!

சென்னை:
ராஜமவுலி இயக்​கத்​தில் மகேஷ்​பாபு ஹீரோ​வாக நடிக்​கும் படத்​துக்கு ‘வாரணாசி’ என்று தலைப்பு வைக்​கப்​பட்​டுள்​ளது.

‘ஆர்​ஆர்​ஆர்’ வெற்​றிக்​குப் பிறகு மகேஷ்​பாபு நடிக்​கும் படத்தை இயக்கி வரு​கிறார், ராஜமவுலி. மகேஷ் பாபு​வின் கேரக்​டரை ஹனு​மனை நினை​வூட்​டும் வகை​யில் வடிவ​மைத்​துள்​ள​தாக ராஜமவுலி​யின் தந்தை விஜயேந்​திர பிர​சாத் கூறி​யிருந்​தார்.

இதற்​கிடையே பிரி​யங்கா சோப்ரா மந்​தாகினி என்ற கதா​பாத்​திரத்​தி​லும் பிருத்​வி ​ராஜ், கும்பா என்ற கதா​பாத்​திரத்​தி​லும் நடிக்​கின்​றனர்.

அவர்​களின் முதல் தோற்ற போஸ்​டர் வெளி​யிடப்​பட்ட நிலை​யில் படத்​தில் டைட்​டில் டீஸர், ஹைதரா​பாத்தில் நடந்த ‘குளோப் ட்ராட்​டர்’ நிகழ்​வில் நேற்று முன்தினம் வெளி​யிடப்​பட்​டது. இப்​படத்​துக்கு ‘வாரணாசி’ என்று தலைப்பு வைத்​துள்​ளனர்.

இதில் மகேஷ்​பாபு, ருத்ரா என்ற கதா​பாத்​திரத்​தில் நடிக்​கிறார். பிரம்​மாண்​ட​மான விஎஃப்எக்ஸ் காட்​சிகளு​டன் உரு​வாக்​கப்​பட்​டுள்ள இந்த டீஸர் இணை​யத்​தில் வரவேற்​பைப் பெற்​றுள்​ளது. இதன் கதை ராமாயணக் காலத்​தில் தொடங்கி இன்​றைய நவீன காலத்​துடன் இணைத்து உரு​வாக்​கப்​பட்​டுள்​ள​தால் படத்​துக்கு அதிக எதிர்​பார்ப்பு ஏற்​பட்​டுள்​ளது.

இதற்​கிடையே ‘குளோப் ட்ராட்​டர்’ நிகழ்ச்​சி​யில் பேசிய ராஜமவுலி​யின் தந்​தை​யும், திரைக்​கதை ஆசிரியரு​மான விஜயேந்​திர பிர​சாத், “இந்​தப் படம் ஒரு தெய்​வீக முடிவு, ராஜமவுலி​யின் இதயத்​தில் இருந்து ஹனு​மன் இப்​படத்தை இயக்​கு​வதற்கு வழி நடத்​துகிறார், இந்​தப் படம் ஹனு​மன் மூலம்​தான் வந்​தது என்று கூறி​னார். பின்​னர் டைட்​டில் டீஸர் வெளி​யீட்​டின் போது ஏற்​பட்​டத் தொழில்​நுட்ப கோளாறு காரண​மாக நிகழ்ச்சி அரை மணி நேரம் நிறுத்​தப்​பட்​டது.

அடுத்து பேசிய ராஜமவுலி, “எனக்கு கடவுள் நம்​பிக்கை இல்​லை. என் தந்​தை, ஹனு​மன் என் பின்​னால் இருப்​பார் என்​றும் என்னை கவனித்​துக் கொள்​வார் என்​றும் சொன்​னார். அவர் இப்​படித்​தான் கவனித்​துக் கொள்​கிறா​ரா? என் மனைவி ரமாவுக்​கும் ஹனு​மன் மீது பக்தி உண்​டு.

அவர் மீதும் எனக்கு இப்​போது கோபம் வந்​தது” என்​றார். அவருடைய இந்​தப் பேச்சு இணை​யத்​தில் சர்ச்​சையை ஏற்​படுத்தி இருக்​கிறது.

நிகழ்ச்​சி​யில் ஏற்​பட்ட தொழில்​நுட்​பக் கோளாறுக்கு ஹனு​மனைக் குறை சொல்​வ​தா? என்​றும் ரா​மாயணத்​தின் அடிப்​படை​யில் ‘வாரணாசி’ என்ற தலைப்​பில் படத்தை எடுத்​து​விட்டு இப்​படிச் சொல்​லலா​மா? என்​றும்​ கேட்​டு வருகின்​றனர்​.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *