மேட்டூர் / தருமபுரி:
மேட்டூர் அணைக்கு விநாடிக்கு 5,841 கனஅடியாக இருந்த நீர்வரத்து நேற்று 6,367 கனஅடியாக அதிகரித்தது.
அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு விநாடிக்கு 1,000 கன அடியும், கால்வாய் பாசனத்துக்கு 400 கனஅடியும் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
நீர் வரத்தை காட்டிலும், தண்ணீர் வெளியேற்றம் குறைவாக இருப்பதால் அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.
தற்போது அணையின் நீர்மட்டம் 112.33 அடியிலிருந்து 112.61 அடியாகவும், நீர் இருப்பு 81.76 டிஎம்சியிலிருந்து 82.17 டிஎம்சியாகவும் உயர்ந்துள்ளது.
தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரியில் கடந்த 2-ம் தேதி இரவு முதல் நேற்று மாலை வரை தொடர்ந்து 19 நாட்களாக அளவில் மாற்றமின்றி விநாடிக்கு 6,500 கனஅடியாகவே நீர்வரத்து நீடிக்கிறது.