என்னை அதிபராக தேர்வு செய்யா விட்டால் ரத்தக்களறிதான் ஏற்படும்…. டொனால்ட் ட்ரம்ப்பின் பேச்சால் அதிர்ச்சி…

அமெரிக்கா;

அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும். இரு கட்சி ஆட்சிமுறையை கொண்ட அமெரிக்காவில் அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி மற்றும் குடியரசு கட்சி ஆகிய கட்சிகளின் சார்பில் அதிபர் வேட்பாளர்கள் நிறுத்தப்படுவார்கள்.

தற்போது ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்ற ஜோ பைடன் அதிபராக உள்ளார். அவரது பதவிக்காலம் அடுத்த ஆண்டுடன் நிறைவடைய உள்ளது.

இதனால், அமெரிக்காவில் இந்தாண்டு இறுதியில் அதிபர் தேர்தல் நடைபெறுகிறது.  இந்நிலையில் அதிபர் தேர்தலில் மீண்டும் போட்டியிட போவதாக டொனால்டு டிரம்ப் அறிவித்தார். அதேபோல், ஜனநாயக கட்சியின் சார்பில் தற்போதைய அதிபர் ஜோ பைடன் போட்டியிட உள்ளார்.

ஜனநாயக கட்சியில் அதிபர் வேட்பாளராவதற்கு, 1,968 பிரதிநிதிகளின் ஆதரவு தேவை என்ற நிலையில், 2,099 பேரின் ஆதரவு ஜோ பைடனுக்கு கிடைத்துள்ளது. குடியரசு கட்சியில் 1,215 பேரின் ஆதரவு தேவை என்ற நிலையில், 1,228 பேரின் ஆதரவை டொனால்டு டிரம்ப் பெற்றுள்ளார்.

இதனால், இருவருக்கும் இடையே அதிபர் பதவிக்கான போட்டி அதிகாரப்பூர்வமாகவே தொடங்கியுள்ளது.

டொனால்டு டிரம்ப் தற்போதே பிரசாரத்தை தொடங்கிவிட்டார். அந்த வகையில், ஓஹியோ மாகாணத்தில்  நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய டொனால்டு டிட்ரம்ப், தன்னை அதிபராக தேர்வு செய்யாவிட்டால் ரத்தக்களறி ஏற்படும் என்று எச்சரித்தார். “அமெரிக்கா வரலாற்றில் அதிபர் தேர்தல் மிகவும் முக்கியமான நாளாகும். என்னை மீண்டும் அதிபராக தேர்வு செய்யவில்லை என்றால் ரத்தக்களறி ஏற்படும்” என்றார். 

இவரது பேச்சால் அமெரிக்க மக்கள் மிகவும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *