ராஞ்சி ஒருநாள் போட்டி: அதிக சதங்​கள் விளாசிய வீரர் என்ற சாதனை படைத்​த விராட் கோலி !!

ராஞ்சி:
தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்தியா 17 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்தப் போட்டியில் விராட் கோலியும், ரோஹித் சர்மாவும் குறிப்பிடத்தக்க சாதனைகளை புரிந்தனர்.

சச்சின் சாதனை காலி: தென் ஆப்​பிரிக்கா​வுக்கு எதி​ராக ராஞ்​சி​யில் நடை​பெற்ற முதல் ஒரு​நாள் போட்​டி​யில் இந்​திய அணி​யின் சீனியர் நட்​சத்​திர​மான விராட் கோலி சதம் விளாசி​னார். தென் ஆப்​பிரிக்க அணிக்கு எதி​ராக அவர், விளாசிய 6-வது சதம் இது​வாகும்.

இதன் மூலம் அந்த அணிக்கு எதி​ராக அதிக சதங்​கள் விளாசிய வீரர் என்ற சாதனையை விராட் கோலி படைத்​தார்.

இதற்கு முன்​னர் சச்​சின் டெண்​டுல்​கர், டேவிட் வார்​னர் ஆகியோர் தென் ஆப்​பிரிக்கா​வுக்கு எதி​ராக தலா 5 சதங்​கள் அடித்​திருந்​ததே சாதனை​யாக இருந்​தது.

சிக்ஸர் மன்னன் ரோஹித்: தென் ஆப்​பிரிக்கா​வுக்கு எதி​ராக ராஞ்​சி​யில் நேற்று நடை​பெற்ற முதல் ஒரு​நாள் போட்​டி​யில் இந்திய அணி​யின் தொடக்க வீர​ரான ரோஹித் சர்மா 3 சிக்​ஸர்​கள் விளாசி​னார்.

இதன் மூலம் சர்​வ​தேச ஒரு​நாள் கிரிக்​கெட் போட்​டிகளில் அதிக சிக்​ஸர்​கள் விளாசிய வீரர் என்ற சாதனையை படைத்​தார்.

அவர், இது​வரை 352 சிக்​ஸர்​கள் பறக்​க​விட்​டுள்​ளார். இதற்கு முன்​னர் பாகிஸ்​தானின் ஷாகித் அப்​ரிடி விளாசிய 351 சிக்​ஸர்​களே சாதனை​யாக இருந்​தது. இதை முறியடித்து தற்​போது புதிய சாதனை படைத்​துள்​ளார் ரோஹித்​ சர்​மா.

அதிக போட்டிகளில் விளையாடிய ஜோடி: நட்சத்திர வீரர்களான ரோஹித் சர்மா – விராட் கோலி ஆகியோர் இணைந்து இந்தியாவுக்காக அதிக போட்டிகளில் (392) பங்கேற்றவர்கள் என்ற சாதனையை படைத்துள்ளனர்.

இதற்கு முன்னர் சச்சின் டெண்டுல்கர் – ராகுல் திராவிட் ஆகியோர் கூட்டாக 391 போட்டிகளில் விளையாடி இருந்தார்கள்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *