சையது மோடி சர்வதேச பாட்மிண்டன் தொடர்- பட்டத்தை தக்கவைத்தது காயத்ரி – ட்ரீசா ஜாலி ஜோடி!!

லக்னோ:
சையது மோடி சர்வதேச பாட்மிண்டன் தொடர் லக்னோவில் நடைபெற்று வந்தது. இதில் மகளிர் இரட்டையர் இறுதிப் போட்டியில் நடப்பு சாம்பியனான இந்தியாவின் காயத்ரி கோபிசந்த், ட்ரீசா ஜாலி ஜோடி ஜப்பானின் கஹோ ஒசாவா, மை தனபே ஜோடியை எதிர்த்து விளையாடியது.

ஒரு மணி நேரம் 16 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் காயத்ரி, ட்ரீசா ஜோடி 17-21, 21-13, 21-15 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை தக்கவைத்தது.

ஆடவர் ஒற்றையர் இறுதிப் போட்டியில் இந்தியாவின் கிடாம்பி ஸ்ரீகாந்த், 16-21, 21-8, 20-22 என்ற செட் கணக்கில் போராடி ஹாங் காங்கின் ஜேசன் குனவானிடம் தோல்வி அடைந்தார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *