நவீன மாடுகள் காப்​பகங்​களை பராமரிக்க விரும்​பும் தொண்டு நிறு​வனங்​கள் மாநக​ராட்சி ஆணை​யரிடம் விருப்பக் கடிதம் கொடுக்​கலாம்!!

சென்னை:
நவீன மாடுகள் காப்​பகங்​களை பராமரிக்க விரும்​பும் தொண்டு நிறு​வனங்​கள் மாநக​ராட்சி ஆணை​யரிடம் விருப்பக் கடிதம் கொடுக்​கலாம் என அறிவிக்​கப்​பட்​டுள்​ளது.

இது தொடர்​பாக சென்னை மாநக​ராட்சி வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பில் கூறி​யிருப்​ப​தாவது: சென்னை மாநக​ராட்சி பகு​தி​களில் 22,875 மாடுகள், அவற்​றின் உரிமை​யாளர்​களால் வளர்க்​கப்​பட்டு வரு​கின்​றன.

இவற்​றில் பெரும்​பாலான மாடுகள் உரிய இடவசதி இன்​றி, தொழு​வங்​களுக்​குள் வைத்து பராமரிக்​கப்​ப​டா​மல் சாலைகள் மற்​றும் பொது இடங்​களில் சுற்​றித்​திரிந்து போக்​கு​வரத்​துக்கு இடையூறு மற்​றும் பொது சுகா​தார சீர்​கேடு ஏற்​படு​கின்றன. சில நேரங்​களில் பொது​மக்​கள் மாடு​களால் தாக்​கப்​படும் சம்​பவங்​களும் நடக்​கின்​றன.

ரூ.10 ஆயிரம் அபராதம்: இப்​படி சுற்​றித்​திரி​யும் மாடு​களை கட்​டுப்​படுத்​தும் பொருட்​டு, மாநக​ராட்​சி​யின் 15 மண்​டலங்​களுக்​கும் தலா ஒரு மாடு பிடிக்​கும் வாக​னம் ஒதுக்​கப்​பட்டு ஒவ்​வொரு மண்​டலத்​துக்​கும் தலா 5 மாடு பிடிக்​கும் ஊழியர்​கள் நியமிக்​கப்​பட்​டுள்​ளனர்.

பிடிக்​கப்​படும் மாடுகள் புதுப்​பேட்​டை​யில் உள்ள மாநக​ராட்சி மாட்​டுத் தொழு​வத்​தில் அடைக்​கப்​பட்​டு, மாடு ஒன்​றுக்கு ரூ.10 ஆயிரம் வீதம் அதன் உரிமை​யாளர்​களிடம் இருந்து அபராத​மாக வசூலிக்​கப்​படு​கிறது.

மீண்​டும் சாலைகளில் விடக்​கூ​டாது என்ற நிபந்​தனை​யுடன் அந்த மாடுகள் உரிமை​யாளர்​களிடம் ஒப்​படைக்​கப்​பட்டு வரு​கிறது.

கடந்த 2021 முதல் 2025 வரை மொத்​தம் 16,692 சுற்​றித்​திரி​யும் மாடுகள் பிடிக்​கப்​பட்​டு, அவற்​றின் உரிமை​யாளர்​களிட​மிருந்து ரூ.4.43 கோடி அபராதம் வசூலிக்​கப்​பட்​டுள்​ளது.

இந்​நிலை​யில், மாட்​டின் உரிமை​யாளர்​கள், மாடு வளர்ப்​போர் சங்க நிர்​வாகி​கள் கோரிக்​கைப்​படி, சென்​னை​யில் 17 இடங்​களில் நவீன மாடுகள் காப்​பகங்​கள் அமைக்​கப்​பட்டு வரு​கின்​றன.

இவற்​றில் திரு​வொற்​றியூர், மாதவரம், ராயபுரம், தேனாம்​பேட்டை ஆகிய மண்​டலங்​களில் நவீன மாடுகள் காப்​பகங்​களில் 710 மாடுகள் அவற்​றின் உரிமை​யாளர்​களால் பராமரிக்​கப்​பட்டு வரு​கின்​றன.

மேலும், 13 இடங்​களில் சுமார் 1,100 மாடு​களை பரமாரிக்​கும் வகை​யில் காப்​பகங்​கள் கட்​டப்​பட்டு வரு​கின்​றன.

புரிந்துணர்வு ஒப்பந்தம்: இத்​திட்​டத்​தில் பேசின் பாலம் சாலை​யில் உள்ள 550 மாடு​களை பரமரிக்​கும் திறன் கொண்ட காப்​பகத்​தில் உள்ள மாடு​களுக்கு தீவனம் வழங்கி பராமரிப்​ப​தற்கு சேவை மனப்​பான்மை உள்ள தன்​னார்​வலர் குழு​விடம் புரிந்​துணர்வு ஒப்​பந்​தம் ஏற்​படுத்​தப்​பட​வுள்​ளது.

இந்த சேவை மற்ற காப்​பகங்​களுக்​கும் விரி​வாக்​கப்பட உள்​ளது. விருப்​பம் உள்ள தொண்டு நிறு​வனங்​கள், விருப்ப கடிதத்தை மாநக​ராட்சி ஆணை​யருக்கு அனுப்​பலாம். இவ்​வாறு செய்​திக்​குறிப்​பில் கூறப்​பட்​டுள்​ளது.


இதன்​பிறகு, பாது​காப்பு சான்​றிதழ் விரை​வில் கிடைத்​து ​விடும் என்​றும், அடுத்தகட்ட நடவடிக்கை மேற்​கொள்​ளப்​படும் என்​றும் எதிர்​பார்க்​கப்​பட்​டது. ஆனால், தற்​போதுவரை மெட்ரோ ரயில்​கள் மற்​றும் வழித்​தடங்​களுக்​கான பாது​காப்பு சான்​றிதழை ரயில்வே வாரி​யம் வழங்​க​வில்​லை.

இதன் காரண​மாக, ஓட்​டுநர் இல்​லாத மெட்ரோ ரயில் சேவை தொடங்​கு​வ​தில் தாமத​மாகும் நிலை ஏற்​பட்​டுள்​ளது.

இதுகுறித்​து, சென்னை மெட்ரோ ரயில் நிறு​வனத்​தின் உயர​தி​காரி ஒரு​வர் கூறிய​தாவது: இப்​பாதை​யில் கடந்த ஆகஸ்​டில் இந்​திய ரயில்வே ஆராய்ச்சி வடிவ​மைப்பு மற்​றும் தர நிர்ணய அமைப்​பினர் சோதனை நடத்​தினர்.

இக்​குழுவினர், ரயில்வே வாரி​யத்​துக்கு அடுத்​தகட்ட நடவடிக்கை மேற்​கொள்ள பரிந்​துரை செய்​துள்​ளனர். இதற்கு ஒப்​புதல் அளித்​து, பாது​காப்பு சான்​றிதழை ரயில்வே வாரி​யம் தர வேண்​டும்.

ரயில்வே வாரி​யம் ஒப்​புதல் அளித்த பிறகே, பெங்​களூரு​வில் உள்ள மெட்ரோ ரயில்வே பாது​காப்பு ஆணை​யர் வந்​து, இப்​பாதை​யில் சோதனை ஓட்​டம் உட்பட பல்​வேறு சோதனை​களை நடத்தி ஆய்வு செய்​வார்.

ஏதாவது திருத்​தம் இருந்​தால், ரயில்வே பாது​காப்பு ஆணை​யர் தெரி​விப்​பார். இல்​லைஎனில், இப்​பாதை​யில் ரயில் இயக்​கலாம் என்று அறிக்கை சமர்ப்​பிப்​பார்.

இச்​செயல்​முறை​கள் முடிந்​து, விரை​வில் ஓட்​டுநர் இல்​லாத மெட்ரோ ரயில் சேவை தொடங்​கும் என்று எதிர்​பார்க்​கிறோம்.

தற்​போது, இப்​பாதை​யில் 95 சதவீதம் பணி​கள் முடிந்​து​விட்​டன. ஓரிரு இடங்​களில் இறு​தி​கட்ட பணி​கள் தீவிரமாக நடை​பெறுகின்​றன.

இப்​பாதை​யில் ஓட்​டுநர் இல்​லாத மெட்ரோ ரயில் சேவையை இயக்க தயா​ராக இருக்​கிறோம். இதற்காக நாங்கள் ரயில்வே வாரியத்துடனும் மெட்ரோ ரயில்வே பாதுகாப்பு ஆணையரகத்துடனும் பேசி வருகிறோம். இவ்​வாறு அவர் கூறி​னார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *