தமிழ்நாட்டில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது!!

தமிழ்நாட்டில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் சற்று முன் வெளியாகியுள்ளது.

தமிழ்நாடு முழுவதும் 12,616 பள்ளிகளில் இருந்து 9,10,024 மாணவர்கள், 28,827 தனித்தேர்வர்கள் மற்றும் 235 சிறை கைதிகள் என மொத்தம் 9,39,086 பேர் தேர்வு எழுதினர். இந்நிலையில் தமிழ்நாட்டில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் 91.55 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

தமிழ்நாடு முழுவதும் 9.03 லட்சம் பேர் தேர்வு எழுதிய நிலையில் 8,18,743 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

இதில் மாணவிகள் 94.53 சதவீதமும், மாணவர்கள் 88.58 சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதன் மூலம் வழக்கம் போல் மாணவர்களை விட மாணவிகள் 5.95 சதவீதம் கூடுதலாக தேர்ச்சி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

மாணவர்கள் தங்களின் தேர்வு முடிவுகளை http://tnresults.nic.in, http://dge.tn.gov.in மற்றும் https://results.digilocker.gov.in என்ற இணையதளங்களில் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *