மணிப்பூர் ;
மணிப்பூர் மாநிலம், உக்ருல் மாவட்டத்தில் மணிப்பூர் பிரதேச காங்கிரஸ் கமிட்டி (எம்பிசிசி) பொதுக் கூட்டம் நேற்று நடைபெற்றது. அப்போது கூட்டத்துக்குள் புகுந்த அடையாளம் தெரியாத கும்பல் ஒன்று திடீரென துப்பாக்கிச் சூடு நடத்தியது. இதில் யாரும் காயமடைந்ததாக தகவல் எதுவும் வெளியாகவில்லை.
இந்த தாக்குதல் சம்பவம் குறித்து செய்தியாளர்களை சந்தித்த மணிப்பூர் காங்கிரஸ் தலைவர் கே.மேகச்சந்திரா ;
கடந்த 18ம் தேதி மதியம் 2 மணியளவில் டி.கே.உட்லேண்ட் ரிசார்ட்டில் ஒரு பொதுக் கூட்டத்தில் பங்கேற்றபோதும் அவர் தாக்கப்பட்டார். அதைத் தொடர்ந்து அக்கூட்டம் ரத்து செய்யப்பட்டது.
தற்போது மீண்டும் நேற்று தாக்கப்பட்டார். இந்த சம்பவங்கள் காரணமாக ஆல்பிரட்டுக்கு சட்ட அமலாக்க முகமைகளால் உடனடியாக பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும், இல்லையெனில் ஒரு குடிமகனின் உரிமை, குறிப்பாக எங்கள் விருப்பமான வேட்பாளரின் உரிமை பறிக்கப்படுவதாக ஆகிவிடும்.
இதுபோன்ற நிலைமை தொடர்ந்தால் மணிப்பூர் மாநிலத்தில் நடைபெறும் தேர்தல் சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தலாக இருக்காது” என்று கூறினார்.