பாஜக கிட்ட 3 கேட்டோம்..  2 குடுத்தாங்க… சம்மதம் தான்… பாஜக கூட்டணி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட பின்  தினகரன் பேட்டி..

சென்னை ;

டிடிவி தினகரனின் அமமுகவும் பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வந்தது. இந்த நிலையில், இன்று இரண்டு கட்சிகளுக்கும் இடையில் ஒப்பந்தம் கையெழுத்தானது.

பாஜக கூட்டணியில் தங்களுக்கு 3 தொகுதிகளை கேட்டு வந்தார் தினகரன். ஆனால், இன்றைய பேச்சுவார்த்தைக்குப் பிறகு, அமமுகவுக்கு 2 தொகுதிகளை ஒதுக்கி இருக்கிறது பாஜக.

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய தினகரன்,

 “பாஜக கூட்டணியில் நாங்கள் 3 தொகுதிகள் கேட்டு கோரிக்கை வைத்திருந்தோம். ஆனால், பாமக உள்ளிட்ட கட்சிகளுக்கும் தொகுதிகளை ஒதுக்க வேண்டி இருந்ததால் எங்களுக்கு 2 தொகுதிகளை ஒதுக்க பாஜக சம்மதம் தெரிவித்தது. அதை ஏற்று பாஜக கூட்டணியில் இணைந்திருக்கிறோம்.

இருந்தபோதும் எந்தத் தொகுதிகளில் அமமுக போட்டியிடும் என்பதை இரண்டொரு நாளில் முடிவு செய்வோம். நான் தேனியில் போட்டியிட வேண்டும் என்பது அமமுக தொண்டர்களின் நீண்ட நாளைய கோரிக்கை. வாய்ப்பிருந்தால் அதையும் பரிசீலிப்போம் ” என்றார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *