ரஞ்சி கோப்பை கிரிக்​கெட் தொடரில் ஒடிசாவுக்கு எதிராக தமிழகம் முன்னிலை!!

புவனேஷ்வர்:
ரஞ்சி கோப்பை கிரிக்​கெட் தொடரில் தமிழ்நாடு – ஒடிசா அணி​கள் இடையி​லான ஆட்​டம் புவனேஷ்வரில் நடைபெற்று வருகிறது. தமிழ்​நாடு அணி முதல் நாள் ஆட்​டத்​தின் முடி​வில் 83 ஓவர்​களில் 7 விக்கெட்கள் இழப்​புக்கு 281 ரன்​கள் எடுத்​தது.

அதிகபட்சமாக பிரதோஷ் ரஞ்​ஜன் பால் 78, ஆந்த்ரே சித்​தார்த் 56, ஆதிஷ் 50 ரன்​கள் சேர்த்​தனர். நிதிஷ் ராஜகோ​பால் 54, கேப்டன் சாய் கிஷோர் 12 ரன்​களு​டன் களத்​தில் இருந்தனர். நேற்று 2-வது நாள் ஆட்​டத்தை தொடர்ந்து விளை​யாடிய தமிழ்​நாடு அணி 86 ஓவர்​களில் 286 ரன்களுக்கு ஆட்​ட​மிழந்​தது.

நிதிஷ் ராஜகோ​பால் 54, சாய் கிஷோர் 12, திரிலோக் நாத் 1 ரன்​னில் நடையை கட்​டினர். ஒடிசா அணி தரப்​பில் ராஜேஷ் மொகன்​டி, தேபப்​பிரதா ஆகியோர் தலா 3 விக்கெட்​களை வீழ்த்​தினர்.

இதையடுத்து விளை​யாடிய ஒடிசா அணி 51.2 ஓவர்​களில் 148 ரன்​களுக்கு சுருண்​டது. அதி​கபட்​ச​மாக அனில் பரிதா 56, சம்​பித் பரால் 36 ரன்​கள் சேர்த்​தனர். தமிழ்​நாடு அணி சார்​பில் மித வேகப்​பந்து வீச்​சாள​ரான சோனு யாதவ் 5 விக்​கெட்​களை வீழ்த்​தி​னார். திரிலோக் நாத், வித்​யுத் ஆகியோர் தலா 2 விக்​கெட்​களை கைப்​பற்​றினர்.

138 ரன்​கள் முன்​னிலை​யுடன் 2-வது இன்​னிங்ஸை விளையாடிய தமிழ்​நாடு அணி 2-வது நாள் ஆட்​டத்​தின் முடி​வில் 17 ஓவர்​களில் ஒரு விக்​கெட் இழப்​புக்கு 26 ரன்​கள் எடுத்​தது. நாராயணன் ஜெகதீசன் 4 ரன்​களில் ஆட்டமிழந்தார்.

ஆதிஷ் 12, வித்​யுத் 7 ரன்​களு​டன் களத்​தில் இருந்தனர். இன்று 3-வது நாள் ஆட்டம் நடைபெறுகிறது.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *