அமைச்சர் உதயநிதியுடன் கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் விஜய் வசந்த் செல்ஃபி எடுத்து மகிழ்ந்தார்.
கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் விஜய் வசந்த்துக்கு ஆதரவாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நாகர்கோவிலில் பரப்புரையாற்றினார். அப்போது, தொண்டர்களையும், பொதுமக்களையும் நோக்கி உதயநிதி ஸ்டாலின் கையசைத்துக் கொண்டிருந்த போது, திடீரென வேட்பாளர் விஜய் வசந்த் அவருடன் செல்ஃபி எடுத்துக் கொண்டனர். இதனை அங்கிருந்த தொண்டர்கள் கைத்தட்டி ஆரவாரம் செய்தனர்.
இதுதொடர்பாக குமரி மக்களவை தொகுதி வேட்பாளர் விஜய் வசந்த் தனது சமூகவலைத்தள பக்கத்தில், நாகர்கோவில் நகரில் நடைபெற்ற மாபெரும் பொதுகூட்டத்தில் இன்று மாண்புமிகு திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்கள் தொண்டர்களை உற்சாகப்படுத்தி இந்தியா கூட்டணியின் வெற்றிக்காக உழைக்க எழுச்சி உரையாற்றினார்.
மாண்புமிகு அமைச்சர் திரு மனோ தங்கராஜ், நாகர்கோவில் மாநகர மேயர் திரு ரெ மகேஷ், காங்கிரஸ் சட்டமன்ற குழு தலைவர் திரு ராஜேஷ்குமார், மாவட்ட தலைவர்கள் உட்பட இந்தியா கூட்டணி கட்சிகளின் தலைவர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர் என்று குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக அமைச்சர் உதயநிதி பேசும் போது, விஜய் வசந்தை தனது நெருங்கிய நண்பர் என கூறியது குறிப்பிடத்தக்கதாகும்.