விவேகானந்தர் நினைவு மண்டபம் தமிழ்நாட்டின் தென்கோடி எல்லையான கன்னியாகுமரியில் இருக்கும் விவேகானந்தர் பாறையின் மேல் அமைந்துள்ளது.
1892ம் ஆண்டு டிசம்பர் மாதம் 25ம் தேதி கன்னியாகுமரி வந்த விவேகானந்தர் கடலுக்குள் நீந்திச் சென்று அங்கிருந்த பாறையில் மூன்று நாட்கள் கடும் தவம் இருந்த இடத்தில் இம்மண்டபம் 2 செப்டம்பர் 1970 அன்று அமைக்கப்பட்டது. இங்கு தினசரி சுற்றுலா பயணிகள் வந்து செல்வது வழக்கம்.
இந்நிலையில் கன்னியாகுமரியில் மக்களவைத் தேர்தலை முன்னிட்டு வரும் வெள்ளிக்கிழமை விவேகானந்தர் மண்டபத்திற்கான சுற்றுலா படகு போக்குவரத்து ரத்து செய்யப்படுவதாக தமிழ்நாடு அரசின் பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.