ஸ்ரீவை​குண்​டத்​தில் பாலியல் வன்​கொடுமை செய்​யப்​பட்ட பெண்ணுக்கு நீதி கிடைக்க நடவடிக்கை எடுக்​கவேண்​டும் – எதிர்க்​கட்​சித் தலை​வர் உதயநிதி ஸ்டா​லின், அதி​முக பொதுச்​செய​லா​ளர் பழனி​சாமி வலியுறுத்தல்!!

சென்னை:
ஸ்ரீவை​குண்​டத்​தில் பாலியல் வன்​கொடுமை செய்​யப்​பட்ட பெண்ணுக்கு நீதி கிடைக்க நடவடிக்கை எடுக்​கவேண்​டும் என்று பேரவை எதிர்க்​கட்​சித் தலை​வர் உதயநிதி ஸ்டா​லின், அதி​முக பொதுச்​செய​லா​ளர் பழனி​சாமி ஆகியோர் வலி​யுறுத்​தி​னர்.

இது தொடர்​பாக அவர்​கள் வெளி​யிட்ட அறிக்​கை​களில் கூறி​யிருப்​ப​தாவது:

உதயநிதி ஸ்டா​லின்: ஸ்ரீவை​குண்​டத்​தில் முதல்​வர் விஜய்​யின் ரசிகை ஒரு​வர், ஸ்ரீவை​குண்​டம் தவெக எம்​எல்ஏ சரவணனுக்கு நெருக்​க​மான கட்சி நிர்​வாகி​கள் இரு​வ​ரால் பாலியல் வன்​கொடுமை செய்​யப்​பட்​டுள்ள சம்​பவம் தமிழக பெண்​களை கொதிப்​படையச் செய்​துள்​ளது.

மேலும், ‘அமைச்​சர் ஆனந்​திடம் பேசி உனக்கு வேலை வாங்கி தரு​கிறேன்’ என்று எம்​எல்ஏ சரவணன் சமரசம் பேச முயன்​ற​தாக​வும், இதே​போல் இன்​னொரு பெண்​ணும் பாதிக்​கப்​பட்​டுள்​ள​தாக​வும், ‘எல்​லாம் மேலிடத்​துக்கு தெரி​யும்’ என்று குற்​ற​வாளி​கள் கூறிய​தாக​வும் பாதிக்​கப்​பட்ட பெண் தெரி​வித்​துள்​ளார்.

யார் அந்த மேலிடம்? அது​மட்​டுமில்​லாமல், பாதிக்​கப்​பட்ட பெண்ணை கட்​சியி​லிருந்து நீக்​கி​யுள்​ளனர்.

‘பாலியல் வன்​கொடுமை செய்​தி​களை கேட்​கும் போதெல்​லாம் நெஞ்​சம் கலங்​கு​கிறது’ எனப் பேசிய முதல்​வர், தன் கட்​சி​யைச் சேர்ந்த ஆட்​களே பாலியல் வன்​கொடுமை செய்​தால், பாதிக்​கப்​பட்ட பெண் மீதே நடவடிக்கை எடுக்​கிறார்.

உண்​மை​யிலேயே பெண்​கள் பாது​காப்​பில் முதல்​வருக்கு அக்​கறை இருக்​கிற​தா? ரீல்ஸ் எடுத்து பதி​விடத் தான் சிங்​கப்​பெண் பிரிவை முதல்​வர் உரு​வாக்​கி​னா​ரா? ஸ்ரீவை​குண்​டத்​தில் பாதிக்​கப்​பட்ட பெண்​ணுக்கு நீதி கிடைக்க வேண்​டும்.

குற்​ற​வாளி​களுக்கு ஆதர​வாகச் செயல்​பட்ட எம்​எல்ஏ சரவணன் உடனடி​யாக பதவியி​லிருந்து நீக்​கப்பட வேண்​டும். அவருக்கு ஆதர​வாக இருந்த ஆளுங்​கட்சி மேலிடம் யாரென விசா​ரிக்க வேண்​டும்.

பழனி​சாமி: ஸ்ரீவை​குண்​டத்​தில் பெண் ஒரு​வர், ஸ்ரீவை​குண்​டம் தவெக எம்​எல்ஏ ஆதர​வுடன் கட்சி நிர்​வாகி​களால் பாலியல் வன்​கொடுமைக்கு ஆளாக்​கப்​பட்​ட​தாக வரும் செய்தி அதிர்ச்​சி​யளிக்​கிறது.

இதை மறைக்க, தவெக எம்​எல்​ஏவே அந்த பெண்ணிடம் சமரசம் பேசி​ய​தாக​வும் செய்​தி​கள் வரு​கின்​றன.

சிங்​கப்​பெண் அதிரடிப் படைக்​கான முதல் வழக்கே ஆளுங்​கட்சி வழக்​கா? அது​வும் ஓர் ஆளுங்​கட்சி எம்​எல்ஏ இப்​படிப்​பட்ட செயலுக்கு சமரசம் பேசுவதை இன்​றைய முதல்​வர் ஏற்​றுக்​கொள்​கிறா​ரா?

மேலும், ‘அமைச்​சருக்​குத் தெரி​யும், மேலிடத்​துக்கு தெரி​யும்’ என்​றெல்​லாம் பேச்​சுகள் வரு​கின்​றன. யார் அந்த மேலிடம்?

தொடக்க விழா​வில் சிங்​கிள் டேக்​கிள் பேசிய வசனங்​களை எல்​லாம், உங்​களது கட்​சி​யினரைப் பார்த்து பேசுங்​கள் முதல்​வரே.

பாலியல் வன்​கொடுமைக்கு சமரசம் பேசி மறைக்க முயன்ற உங்​கள் கட்சி எம்​எல்​ஏ-வை பதவி ராஜி​னாமா செய்ய வைத்து கைது செய்ய வேண்​டும்.

பெண்​ணுக்​கு, உங்​கள் ஆட்​சி​யில், உங்​கள் கட்​சி​யின​ரால் நடை​பெற்​றுள்ள இந்த கொடுமைக்கு பதில் சொல்ல வேண்​டிய உங்​களது கடமை.

இந்த வழக்​கில் குற்​றத்​துக்கு துணை போனவர் எம்​எல்ஏ, அமைச்​சர் என யா​ராக இருந்​தா​லும், கடும் சட்ட நடவடிக்கை எடுக்​கப்​பட வேண்​டும் என்று அவர்​கள்​ தெரி​வித்​துள்​ளனர்​.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *