நடிகர் மணிகண்டன், அடுத்ததாக நடிக்கும் புதிய திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு !!

சென்னை:
‘குட் நைட்’, ‘லவ்வர்’ போன்ற திரைப்படங்கள் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களின் மனதை வென்ற நடிகர் மணிகண்டன், அடுத்ததாக நடிக்கும் புதிய திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தமிழ் திரையுலகில் அழுத்தமான கதைகளைத் தேர்ந்தெடுத்து நடித்து வரும் நடிகர் மணிகண்டனின் அடுத்த புதிய பட அறிவிப்பு வெளியாகியுள்ளது.

‘பரியேறும் பெருமாள்’, ‘சார்பட்டா பரம்பரை’ போன்ற சிறந்த படங்களை இயக்கிய முன்னணி இயக்குநர் பா.ரஞ்சித்தின் ‘நீலம் புரொடக்ஷன்ஸ்’ நிறுவனம் இப்படத்தைத் தயாரிக்கிறது.

பா. ரஞ்சித்திடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய சந்தோஷ் குமார் இப்படத்தை இயக்குகிறார். படத்திற்கு ‘மக்கள் காவலன்’ என்று பெயரிடப்பட்டுள்ளது.

எளிய மக்களின் வாழ்வியலையும் அரசியலையும் பேசும் படமாக இது இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

படத்தின் மற்ற நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் பற்றிய விவரங்கள் விரைவில் வெளியாகும் என தயாரிப்புத் தரப்பு அறிவித்துள்ளது.

சமூக அக்கறை கொண்ட, எதார்த்தமான அதேசமயம் வணிக ரீதியிலான அரசியல் த்ரில்லர் பாணியில் இப்படம் உருவாகவுள்ளதாகக் கூறப்படுகிறது.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *