”என் குடும்பத்திலேயே பலருக்கு ஓட்டு இல்லை”- முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்!!

என் குடும்பத்திலேயே பலருக்கு ஓட்டு இல்லை என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அதிமுக அமைச்சர் ஜெயக்குமார், தொண்டர்களை ஒருங்கிணைப்போம் என சசிகலா வெளியிட்டது வெற்றுக் காகிதம். வாக்காளர்களின் பெயர்கள் பட்டியலில் இடம்பெறாதது பற்றி தேர்தல் ஆணையம் விளக்கமளிக்க வேண்டும்.

ஏராளமான வாக்காளர்களின் உரிமைகள் பறிக்கப்பட்டுள்ளது. அதிமுக பொதுச்செயலாளர் சார்பில் மத துவேச பேச்சுக்கு கடுமையான கண்டனங்களை தெரிவிக்க விரும்புகிறேன். தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் சொதப்பிவிட்டது; வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாதது போன்ற குளறுபடிகள் தேர்தல் ஆணையத்தின் தோல்வி. என் குடும்பத்தில் இருப்பவர்களுக்கே இந்த முறை வாக்குரிமை இல்லாமல் போனது; வாக்காளர் பட்டியல் இருந்து அவர்களுடைய பெயர் நீக்கப்பட்டுள்ளது. என்றார்.

தொடர்ந்து பேசிய அவர் , அதிமுக-விற்காக உழைக்காமல், தென் சென்னை தொகுதியில் போட்டியிட்ட தனது மகனுக்காக உழைத்தேன் என ஒரு புகைப்பட ஆதாரத்தை காட்டினால் ரூ.1 கோடி வழங்க தயார் என்றார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *